Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2774 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2774திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (இத் திருவாய்மொழியிற் சொல்லுகிற அர்த்தத்திற்கு இப்பாசுரம் ஸங்க்ரஹ மென்னலாம். மஹாபலியானவன் எம்பெருமான் நம்மிடத்திற்கு அழகிய திருக் கோலங்கொண்டு எழுந்தருளப் போகிறான்’ என்று கனவிலும் கருதாதிருக்கையில், அவப் பக்கலில் தானே யாசகனாய்ச் சென்று நின்றாப் போலே எனக்கு நினைவின்றியே யிருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்காக்கினான்! என்று அவனது நிர்ஹேதுக விஷயீகாரத்தைச் சிந்தித்து உருகிப் பேசுகின்றார்.) 1
பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1
பொரு,poru - போர் செய்ய வல்ல
மா,maa - பெருமை தங்கிய
நீள் படை,neel padai - சிறந்த ஆயுதமாகிய
ஆழி சங்கத்தொடு,aali sangathodu - சங்கு சக்கரங்களோடு கூட
திரு மா நீள் கழல்,thiru maa neel kadal - தனது மிகச் சிறந்த திருவடிகளை
ஏழ் உலகும் தொழ,yel ulagum thozha - ஸகல லோகமும் தொழும்படியாக
ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த,oru maani kural aagi nimirndha - ஒப்பற்ற பிரமசாரி வாமனனான் வளர்ந்தருளின
அ கரு மாணிக்கம்,a karu maanikkam - நீல மணி போன்ற அப் பெருமானை
என் கண்ணுளதாகுமே,en kannulathaagume - எனது கண்ணுக்கு இலக்காயினான்.