Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2775 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2775திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (எம்பெருமான் அடியார்களுக்குக் காட்சி தருந்தன்மை எப்படிப்பட்ட தென்றால், பரமபக்தி யுக்தர்க்கு முகங்காட்டுவது போலவே எண்ணிக்கையினால் தன்னைக் குறிப்பிடுமவர்களுக்கும் முகங்காட்டுந்தன்மை யுள்ளதென்று இப்பாட்டில் கூறப்படுகின்றது) 2
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய்,mannum neerum eriyum nal vaayuvum vinnum aay - பூமி முதலிய பஞ்ச பூதங்களையும் சரீரமாக வுடையனாய்க் கொண்டு
விரியும்,viriyum - ஜகத்தாகப் பரம்புகின்ற
எம் பிரானை,em piranai - எம்பெருமானை
காதன்மையால் தொழில்,kaadhanmaiyaal thozhil - பக்தியோடு தொழுதால்
கண்ணுள்ளே,kannullae - (அவன்) நான் காணும்படி இருப்பன்;
எண்ணிலும் வரும்,ennillum varum - ஒன்று இரண்டு என்று எண்ணினாலும் வந்து நிற்பன்;
என் இனி வேண்டுவம்,en ini venduvam - இனி மேல் என்னகுறை?