Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2776 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2776திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (எம்பெருமானுக்கு அடியார் திறத்தில் அளவிறந்த நீர்மைக்குக் காரணம் பிராட்டி ஸம்பந்தமே யென்று அதனை யநுஸந்தித்து அந்தத் திருமாலைத் தொழாய் நெஞ்சே யென்று திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்) 3
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3
மட நெஞ்சமே,mada nenjamae - விதேயமான மனமே!
எம் பிரானே,em pirane - எமக்கு உபகாரகனும்
எந்தை தந்தை தந்தைக்கும் தம் பிரானை,endhai thandhai thandhaikkum tham pirane - (நம்மளவில் நில்லாமல் நம் குலத்திற்கெல்லாம் நாதனாயிருப்பவனும்
தண் தாமரைக் கண்ணனை,than thaamarai kannaanai - குளிரக் கடாக்ஷிக்கின்ற தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
கொம்பு,kombu - வஞ்சிக் கொடியினும்
அராவு,araavu - ஸர்ப்பத்தினும்
நுண்,nun - நுட்பமான
நேர்,ner - நேர்த்தி பொருந்திய
இடை,idai - இடையை யுடையவளான பிராட்டியை
மார்பனை,maarpanai - மார்பிலே உடையனுமான
எம்பிரானை,em pirane - எம்பெருமானை
தொழாய்,thozhai - வணங்குவாயாக.