| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2776 | திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (எம்பெருமானுக்கு அடியார் திறத்தில் அளவிறந்த நீர்மைக்குக் காரணம் பிராட்டி ஸம்பந்தமே யென்று அதனை யநுஸந்தித்து அந்தத் திருமாலைத் தொழாய் நெஞ்சே யென்று திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்) 3 | எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3 | மட நெஞ்சமே,mada nenjamae - விதேயமான மனமே! எம் பிரானே,em pirane - எமக்கு உபகாரகனும் எந்தை தந்தை தந்தைக்கும் தம் பிரானை,endhai thandhai thandhaikkum tham pirane - (நம்மளவில் நில்லாமல் நம் குலத்திற்கெல்லாம் நாதனாயிருப்பவனும் தண் தாமரைக் கண்ணனை,than thaamarai kannaanai - குளிரக் கடாக்ஷிக்கின்ற தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும் கொம்பு,kombu - வஞ்சிக் கொடியினும் அராவு,araavu - ஸர்ப்பத்தினும் நுண்,nun - நுட்பமான நேர்,ner - நேர்த்தி பொருந்திய இடை,idai - இடையை யுடையவளான பிராட்டியை மார்பனை,maarpanai - மார்பிலே உடையனுமான எம்பிரானை,em pirane - எம்பெருமானை தொழாய்,thozhai - வணங்குவாயாக. |