| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2777 | திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (“எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே!” என்று கீழே தாஞ்சென்னவாறே மேல்விழுந்து தொழுத நெஞ்சைக் கொண்டாடி, என்றைக்காவது நான் நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பிரியப் பார்த்தவிடத்திலும் எம்பிரானை விடாமலே தொடர வேணுமென்று அந்த நெஞ்சையிரக்கிறார்.) 4 | நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் மைந்தனை மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4 | நெஞ்சமே,nenjamae - மனமே! நல்லை நல்லை,nallai nallai - நீ மிகவும் நன்மையை யுடையை; உன்னைப் பெற்றால்,unnai petraal - உன்னை உதவியாகப் பெற்றால் என் செய்யோம்,en seiyyom - எதைத் தான் செய்து முடிக்க மாட்டோம்; (எதையுஞ்செய்து முடிக்கலாம்) இனி என்ன குறைவினம்,ini enna kurai vinam - இனி என்ன குறையை யுடையோம்? மைந்தனை,maindhanai - நித்ய யௌவன முடையவனும் மலராள் மணவாளனை,malaral manavaalanai - திருமகள் நாதனுமான எம்பெருமானை துஞ்சும் போதும்,thunjum podhum - நான் அகன்று மறந்த போதும் விடாது தொடர்,vidaadhu thodar - நீ விடாமல் தொடர்ந்து நில்; கண்டாய்,kandai - முன்னிலையசை |