Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2777 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2777திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (“எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே!” என்று கீழே தாஞ்சென்னவாறே மேல்விழுந்து தொழுத நெஞ்சைக் கொண்டாடி, என்றைக்காவது நான் நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பிரியப் பார்த்தவிடத்திலும் எம்பிரானை விடாமலே தொடர வேணுமென்று அந்த நெஞ்சையிரக்கிறார்.) 4
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4
நெஞ்சமே,nenjamae - மனமே!
நல்லை நல்லை,nallai nallai - நீ மிகவும் நன்மையை யுடையை;
உன்னைப் பெற்றால்,unnai petraal - உன்னை உதவியாகப் பெற்றால்
என் செய்யோம்,en seiyyom - எதைத் தான் செய்து முடிக்க மாட்டோம்; (எதையுஞ்செய்து முடிக்கலாம்)
இனி என்ன குறைவினம்,ini enna kurai vinam - இனி என்ன குறையை யுடையோம்?
மைந்தனை,maindhanai - நித்ய யௌவன முடையவனும்
மலராள் மணவாளனை,malaral manavaalanai - திருமகள் நாதனுமான எம்பெருமானை
துஞ்சும் போதும்,thunjum podhum - நான் அகன்று மறந்த போதும்
விடாது தொடர்,vidaadhu thodar - நீ விடாமல் தொடர்ந்து நில்;
கண்டாய்,kandai - முன்னிலையசை