திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2777 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2777திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (“எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே!” என்று கீழே தாஞ்சென்னவாறே மேல்விழுந்து தொழுத நெஞ்சைக் கொண்டாடி, என்றைக்காவது நான் நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பிரியப் பார்த்தவிடத்திலும் எம்பிரானை விடாமலே தொடர வேணுமென்று அந்த நெஞ்சையிரக்கிறார்.) 4
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் மைந்தனை மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4
பதவுரை Show / Hide
நெஞ்சமே,nenjamae - மனமே!
நல்லை நல்லை,nallai nallai - நீ மிகவும் நன்மையை யுடையை;
உன்னைப் பெற்றால்,unnai petraal - உன்னை உதவியாகப் பெற்றால்
என் செய்யோம்,en seiyyom - எதைத் தான் செய்து முடிக்க மாட்டோம்; (எதையுஞ்செய்து முடிக்கலாம்)
இனி என்ன குறைவினம்,ini enna kurai vinam - இனி என்ன குறையை யுடையோம்?
மைந்தனை,maindhanai - நித்ய யௌவன முடையவனும்
மலராள் மணவாளனை,malaral manavaalanai - திருமகள் நாதனுமான எம்பெருமானை
துஞ்சும் போதும்,thunjum podhum - நான் அகன்று மறந்த போதும்
விடாது தொடர்,vidaadhu thodar - நீ விடாமல் தொடர்ந்து நில்;
கண்டாய்,kandai - முன்னிலையசை