Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2778 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2778திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (இத்திருவாய்மொழியை நிர்ஹேதுக விஷயீகார பரமாக பட்டர் நிர்வஹித்ததற்கு இப் பாசரமே நிதானமாயிருக்கும். கீழ் இரண்டாம் பாட்டில் “எண்ணிலும் வரும்” என்று ப்ரஸ்துதமான எண் தானுமில்லாமல் அவனே மேல் விழுந்து விஷயீகரித்தபடியை நெஞ்சுக்கு முதலிக்கிறார்.) 5
கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5
நெஞ்சே,nenje - மனமே!
கருமங்கள் வாய்க்கின்று,karumangal vaaykkinru - காரியங்கள் பலிக்குமிடத்தில்
ஓர் எண் தானும் இன்றியே,or en thaandum indriye - (நம்முடைய) நினைவு ஒன்றுமேயில்லாமல்
வந்து இயலும் ஆறு,vandhu ialum aaru - பலித்து வருகிறபடியை
கண்டாயே,kandaye - பார்த்தாயோ? (எங்ஙனே யெனில்)
உலகும் ஏழும்,ulagum ezhum - ஏழு லோகங்களையும்
உண்டானை,undaanai - (பிரளயத்தில்) விழுங்கினவனும்
ஓர் மூ அடி கொண்டானை,or moo adi kondaanai - (மற்றொருகால் அவ்வுலகங்களை) மூன்றடிகளாலே அளந்து கொண்டவனுமான பெருமானை
நீயும் : கண்டு கொண்டனை,neeyum: kandu kondanai - நீயும் காணப் பெற்றாயன்றோ?