திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2778 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2778திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (இத்திருவாய்மொழியை நிர்ஹேதுக விஷயீகார பரமாக பட்டர் நிர்வஹித்ததற்கு இப் பாசரமே நிதானமாயிருக்கும். கீழ் இரண்டாம் பாட்டில் “எண்ணிலும் வரும்” என்று ப்ரஸ்துதமான எண் தானுமில்லாமல் அவனே மேல் விழுந்து விஷயீகரித்தபடியை நெஞ்சுக்கு முதலிக்கிறார்.) 5
கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு உண்டானை உலகேழுமோர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5
பதவுரை Show / Hide
நெஞ்சே,nenje - மனமே!
கருமங்கள் வாய்க்கின்று,karumangal vaaykkinru - காரியங்கள் பலிக்குமிடத்தில்
ஓர் எண் தானும் இன்றியே,or en thaandum indriye - (நம்முடைய) நினைவு ஒன்றுமேயில்லாமல்
வந்து இயலும் ஆறு,vandhu ialum aaru - பலித்து வருகிறபடியை
கண்டாயே,kandaye - பார்த்தாயோ? (எங்ஙனே யெனில்)
உலகும் ஏழும்,ulagum ezhum - ஏழு லோகங்களையும்
உண்டானை,undaanai - (பிரளயத்தில்) விழுங்கினவனும்
ஓர் மூ அடி கொண்டானை,or moo adi kondaanai - (மற்றொருகால் அவ்வுலகங்களை) மூன்றடிகளாலே அளந்து கொண்டவனுமான பெருமானை
நீயும் : கண்டு கொண்டனை,neeyum: kandu kondanai - நீயும் காணப் பெற்றாயன்றோ?