| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2778 | திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (இத்திருவாய்மொழியை நிர்ஹேதுக விஷயீகார பரமாக பட்டர் நிர்வஹித்ததற்கு இப் பாசரமே நிதானமாயிருக்கும். கீழ் இரண்டாம் பாட்டில் “எண்ணிலும் வரும்” என்று ப்ரஸ்துதமான எண் தானுமில்லாமல் அவனே மேல் விழுந்து விஷயீகரித்தபடியை நெஞ்சுக்கு முதலிக்கிறார்.) 5 | கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு உண்டானை உலகேழுமோர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5 | நெஞ்சே,nenje - மனமே! கருமங்கள் வாய்க்கின்று,karumangal vaaykkinru - காரியங்கள் பலிக்குமிடத்தில் ஓர் எண் தானும் இன்றியே,or en thaandum indriye - (நம்முடைய) நினைவு ஒன்றுமேயில்லாமல் வந்து இயலும் ஆறு,vandhu ialum aaru - பலித்து வருகிறபடியை கண்டாயே,kandaye - பார்த்தாயோ? (எங்ஙனே யெனில்) உலகும் ஏழும்,ulagum ezhum - ஏழு லோகங்களையும் உண்டானை,undaanai - (பிரளயத்தில்) விழுங்கினவனும் ஓர் மூ அடி கொண்டானை,or moo adi kondaanai - (மற்றொருகால் அவ்வுலகங்களை) மூன்றடிகளாலே அளந்து கொண்டவனுமான பெருமானை நீயும் : கண்டு கொண்டனை,neeyum: kandu kondanai - நீயும் காணப் பெற்றாயன்றோ? |