| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2779 | திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (“விடாது தொடர் கண்டாய்” என்ற ஆழ்வாரை நோக்கி நெஞ்சானது, நான் விடாது தொடர்கிறேன். அவன் விட்டால் செய்வதென்? என்ன; நைச்சியாநுஸந்தானம் பண்ணி நாம் அகலாதொழியில் நம்மை யொரு நாளும் அவன் விடானென்கிறார்) 6 | நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன் தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6 | நெஞ்சமே,nenjamae - மனமே! நீயும் நானும்,neeyum naanum - நீயும் நானுமாக இ சேர் நிற்கின்,e ser nirkin - இந்த நிலையிலே நின்றால் மேல்,mel - இனி மேல்; இ உலகினில்,e ulaginil - இவ் வுலகத்தில் தாயும் தந்தையும் ஆய்,thaayum thandhaiyum aay - மாதாவும் பிதாவுமாகி வாயும்,vaayum - அவதரித்துள்ளவனும் மணிவண்ணன்,manivannan - நீல மணி வண்ணனும் எந்தை,endhai - எமக்கு ஸ்வாமி யுமாகிய ஈசன்,eesan - ஸர்வேச்வரன் ம ற்று ஓர் நோயும் சார் கொடான்,ma rr u oar noayum saar kodaan - வேறொரு துன்பமும் அணுகவொட்டான்; சொன்னேன்,sonnaen - இது உண்மையாகச் சொன்னேன். |