Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2780 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2780திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) ( “ந அச்லீலம் கீர்த்தயேத்” என்று வேத புருஷன் சொன்னான்; அச்லீலமான விஷயத்தை வாயினாற் சொல்லக்கூடாது என்றபடி, நைச்சியாநுஸந்தானம் பண்ணி அவனை விட்டுப்பிரிதல் என்கிற அச்லீலத்தை இவர் தாமே *ப்ரஸ்தாவித்தமையால் அப்படியே வந்து புகுந்தது. அயோக்யன் என்று அகலுகிறாரிப்பாட்டில் .) 7
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7
வானவர்,vaanavar - நித்ய ஸூரிகள்
எந்தை எம் பெருமான் என்று,endhai em perumaan endru - ‘எந்தையே! எம்பெருமானே! என்று
சிந்தையுள் வைத்து,sinthaiyul vaithu - மனத்தினால் சிந்தித்து
சொல்லும்,sollum - வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற
செல்வனை,selvanaai - ஸ்ரீமானாகிய எம்பெருமானை
பாவியேன்,paaviyaen - பாவியாகிய நான்
எந்தையே என்றும்,endhaiye endrum - எந்தையே! என்றும்
எம்பெருமான் என்றும்,emperumaan endrum - எம்பெருமானே என்றும்
சிந்தையுள் வைப்பன்,sinthaiyul vaippan - மனத்தில் வைப்பேன்;
சொல்லுவன்,solluvan - வாயினாலுஞ் சொல்வேன்