| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2781 | திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) ( விலக்ஷணர்கள் தாமே ஈடுபடுதற்கரித்தான பகவத் விஷயத்தில் தாம் ஈடுபடுவது தகாதென்று உறுதிகொண்ட ஆழ்வார், பகவத் விஷயம் நடையாடாத தோரிடத்திலே கிடக்கவேணுமென்று போய் ஒரு குட்டிச் சுவரிலே முட்டாக்கிட்டுக் கொண்டு கிடந்தாராம்; அங்கே பெருஞ்சுமை யெடுத்துபோகிற ஒரு வழிப்போக்கன் சுமைக்கனத்ததனால் அதனைக் கீழே தள்ளுவான் ‘ஸ்ரீமந்நாராயணா! என்று சொல்லிக்கொண்டே தள்ளினானாக, அச்சொல் செவிப்பட்ட மாத்திரத்திலே தம்முடைய கரணங்கள் மீண்டும் பகவத் விஷயத்தில் ப்ரவணமானபடியைக் கண்டு வியக்கிறார்) 8 | செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே அல்லும் நன்பகலும் இடைவீடின்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8 | செல்வம் நாராணன் என்ற,selvam naaranan endra - ஸ்ரீமந்நாராயணன் என்கிற வார்த்தையை சொல் கேட்டலும்,sol kettalum - கேட்டவளவிலே கண்,kan - கண்களானவை பனி மல்கும்,pani malgum - நீர் ததும்புகின்றன நாடுவன்,naaduvan - (எங்குற்றாய் எம்பெருமான்! என்று அவனைத்) தேடா நின்றேன்! மாயமே,maayamae - இது ஆச்சரியமே; நம்பி,nambi - எல்லாவற்றாலும் நிறைந்த அப்பெருமான் நல் அல்லும் பகலும்,nal allum pagalum - நல்ல இரவும் பகலும் இடை வீடு,idai veedu - இடைவிடாமல் இன்றி நல்கி,indri nalki - கிருபை பண்ணி நம்பி,nambi - என்மேல் விருப்பங்கொண்டு என்னைவிடான்,ennaividaan - என்னை விடாதிருக்கிறான். |