Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2782 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2782திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (அவன் விடாதிருந்தாலிருக்கட்டும்; நீர் அவனை மறந்து ஸம்ஸாரிகளைப் போலே* உண்டியே உடையே உகந்தோடித் திரியமாட்டீரோ வென்ன, நான் எதையிட்டு அவனை மறப்பது? மறக்கும்வகை தெரியவில்லையே யென்கிறார்.) 9
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9
நம்பியை,nambiyai - கல்யாண குண பரிபூர்ணனும்
தென் குறுங்குடி நின்ற,then kurungudi nindra - திருக்குறுங்குடியிலே நிற்பவனும்
அ செம்போனே திகழும் திருமூர்த்தியை,a semponae thigazhum thirumoorthyai - அழகிய செம்பொன் போலவே பிரகாசிக்கின்ற திருமேனியை யுடையவனும்.
உம்பர் வானவர்,umbar vaanavar - மேலான நித்ய ஸூரிகளுக்கு
ஆதி,aadhi - காரண பூதனும்
அம் சோதியை,am sodhiyai - அழகிய ஒளி யுருவனுமாகிய
எம் பிரானை,em piranai - எம்பெருமானை
என் சொல்லி,en soll - என்னவென்று
மறப்பேன்,marappeen - மறப்பேன்