திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2784 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2784திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (ஸ்ரீ ஈடு - நிகமத்தில் , ‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார். ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – கல்வி என்றதுக்கு கைங்கர்யத்தை விவஷித்து அவதாரிகை) 11
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன் தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11
பதவுரை Show / Hide
மணியை,maniyai - நீல மணி போன்றவனும்
வானவர் கண்ணனை,vaanavar kannanai - நித்ய ஸூரிநாதனும்
தன்னது ஓர் அணியை ,thannathu or aniyaai - தனக்கு தானே ஓராபரணமாயிறு பவனுமான பெருமானைக் குறித்து
தென் குருகூர்ச் சடகோபன்,then kurukoor sadakoopan - தென் குருகூர்ச் சடகோபன்
சொல் பணி செய்,sol pani sey - வாசிக கைங்கர்யம் செய்த
ஆயிரத்துள்,aayiraththuḷ - ஆயிரத்தினுள்
இவை பத்து,ivai pathu - இப்பத்துப் பாட்டையும்
உடன் ,udan - கருத்துடன்
தணிவு இலர் ,thanivu ilar - த்ருப்தி பெறாதவர்களாய்
கற்பர் ஏல் ,karpar ael - கற்பாராயின் (அவர்களுக்கு)
கல்வி வாயும் ,kalvi vaayum - ஞானம் நிரம்பும்