Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2784 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2784திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (ஸ்ரீ ஈடு - நிகமத்தில் , ‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார். ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – கல்வி என்றதுக்கு கைங்கர்யத்தை விவஷித்து அவதாரிகை) 11
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11
மணியை,maniyai - நீல மணி போன்றவனும்
வானவர் கண்ணனை,vaanavar kannanai - நித்ய ஸூரிநாதனும்
தன்னது ஓர் அணியை ,thannathu or aniyaai - தனக்கு தானே ஓராபரணமாயிறு பவனுமான பெருமானைக் குறித்து
தென் குருகூர்ச் சடகோபன்,then kurukoor sadakoopan - தென் குருகூர்ச் சடகோபன்
சொல் பணி செய்,sol pani sey - வாசிக கைங்கர்யம் செய்த
ஆயிரத்துள்,aayiraththuḷ - ஆயிரத்தினுள்
இவை பத்து,ivai pathu - இப்பத்துப் பாட்டையும்
உடன் ,udan - கருத்துடன்
தணிவு இலர் ,thanivu ilar - த்ருப்தி பெறாதவர்களாய்
கற்பர் ஏல் ,karpar ael - கற்பாராயின் (அவர்களுக்கு)
கல்வி வாயும் ,kalvi vaayum - ஞானம் நிரம்பும்