Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2789 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2789திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (நீராய் இற்று விழுகின்ற மேகத்தைக்கண்டு, நீயும் என்னைப்போலே எம்பெருமானுடைய குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு நோவுபடுகிறாய் போலுமென்று சோகித்துச் சொல்லுகிற பாசுரம் இது. மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர் விட்டு அழுகிறபடியாக வெண்ணிச் சொல்லுகிறாள்.) 5
ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5
உலகுக்கு நீர்கொண்டு,ulagukku neer kondu - உலகுக்கெல்லாம் ஆகும்படி நீரை முகந்து கொண்டு
ஊழி ஊழி தோறு,oozhi oozhi thooru - காலமுள்ளவளவும்
நீர்ஆய்,neer aay - நீர்வடிவமாய்
நெகிழ்கின்ற,nekizhkindra - விழுகின்ற
வானமே,vaaname - மேகமே !
நீயும்,neeyum - நீயும்
தோழியரும் யாமும் போல்,thozhiyarum yaamum pol - (எமது) தோழிமார்களும் நாங்களும்போல
மதுசூதன் பாழிமையில் பட்டு,madhusoodhan paalimaiyil pattu - எம்பெருமானது பெருமிடுக்கிலே அகப்பட்டு
அவன் கண் பாசத்தால்,avan kan paasathaal - அவனிடத்து விருப்பத்தினால்
நைவாயே,naivaayae - அழிகின்றனையோ?
வாழிய,vaazhiya - (இந்தத் துன்பம் தீர்த்து) வாழ்வாயாக.