| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2789 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (நீராய் இற்று விழுகின்ற மேகத்தைக்கண்டு, நீயும் என்னைப்போலே எம்பெருமானுடைய குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு நோவுபடுகிறாய் போலுமென்று சோகித்துச் சொல்லுகிற பாசுரம் இது. மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர் விட்டு அழுகிறபடியாக வெண்ணிச் சொல்லுகிறாள்.) 5 | ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற வாழிய வானமே நீயும் மதுசூதன் பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5 | உலகுக்கு நீர்கொண்டு,ulagukku neer kondu - உலகுக்கெல்லாம் ஆகும்படி நீரை முகந்து கொண்டு ஊழி ஊழி தோறு,oozhi oozhi thooru - காலமுள்ளவளவும் நீர்ஆய்,neer aay - நீர்வடிவமாய் நெகிழ்கின்ற,nekizhkindra - விழுகின்ற வானமே,vaaname - மேகமே ! நீயும்,neeyum - நீயும் தோழியரும் யாமும் போல்,thozhiyarum yaamum pol - (எமது) தோழிமார்களும் நாங்களும்போல மதுசூதன் பாழிமையில் பட்டு,madhusoodhan paalimaiyil pattu - எம்பெருமானது பெருமிடுக்கிலே அகப்பட்டு அவன் கண் பாசத்தால்,avan kan paasathaal - அவனிடத்து விருப்பத்தினால் நைவாயே,naivaayae - அழிகின்றனையோ? வாழிய,vaazhiya - (இந்தத் துன்பம் தீர்த்து) வாழ்வாயாக. |