| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2790 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (கலாமாத்ரமாய் தேய்ந்து தோன்றின இளம்பிறைச் சந்திரனைக்கண்டு அந்தோ!உன் வடிவில் எழிலெல்லாம் இழந்தாயே! நீயும் அப்பெருமானுடைய பொய்யுரையிலே நம்பிக்கை கொண்டு நான் பட்டபாடு படுகின்றாய்போலும் ! என்கிறாள்.) 6 | நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால் ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –2-1-6 | நாள் மதியே,naal madhiye - நிரம்பின சந்திரனே ! நைவு ஆய,naivu aay - நைந்து போவதையே இயற்கையாகவுடைய எம்மே போல்,emmae pol - எங்களைப்போல (ஒளி யுரவாகிய) நீயும் இ நாள்,i naal - இக்காலத்திலே மை வான்,mai vaan - காரிய ஆகாயத்திலுள்ள இருள்,irul - இருளை அகற்றாய்,akkaraay - நீக்குகின்றிலையாகி மாழாத்து,maazhaathu - மயங்கி தேம்புதி,thembuthi - குறைபடுகின்றாய்; ஆல்,aal - ஆதலால் ஐ வாய்,ai vaay - ஐந்து முகங்களுடைய அரவு அணை மேல்,aravu anai mel - சேஷசயனத்தின் மீது உள்ள ஆழி பெருமானார்,aazhi perumanaar - சக்கரபாணியான எம்பெருமானது மெய் வாசகம் கேட்டு,mei vaasagam kettu - உண்மையான வார்த்தையைக் கேட்டு உன் மெய் நீர்மை,un mei neermai - உனது வடிவின் குணமாகிய ஒளியை தோற்றாயே,thoorraayae - இழந்தாய் போலும்! |