திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2791 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2791திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (ஒருவரையொருவர் காணவொண்ணாதபடி மூடின இருளைக்குறித்து ‘இருளே. எம்பெருமானைப் பிரிந்து நோவுபட்டிருக்கிறவென்னை நீயும் இப்படி ஹிம்ஸிப்பாயோ? என்றுபொடிந்து பேசுகின்றாள்.) 7
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7
பதவுரை Show / Hide
கனம் இருளே,kanam irulae - கனத்திருக்கின்ற இருளே !
எம்பெருமான்,emperumaan - எமக்கு ஸ்வாமியான
நாரணற்கு,naaranarkku - நாராயணனுக்கு
மடம் நெஞ்சம் தோற்றோம்,madam nenjama thortrom - விதேயமான நெஞ்சைப் பறிகொடுத்தோமாகி
எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை,em aatrraamai sollu aluvoamai - எங்கள் ஆற்றாமையை வாய்விட்டுச் சொல்லி அழுகின்ற எங்களை
நீ,nee - நீ
நடுவே,naduve - நடுவில்நுழைத்து
வேற்றோர்வகையின்,vertror vakaiyin - பவைகர்கள் நலிகிற வகையைக் காட்டிலும்
கொடிது ஆய்,kodithu aay - கொடுமையாகி
எனை ஊழி,enai oozhi - காலமுள்ளவளவும்
மாற்றாண்மை,maattraanmai - பகைவரது தன்மையை ஆளகையில்
நிற்றியோ,nirtriyo - நிற்கிறாயோ?
வாழி,vaazhi - இந்நிலைமை நீங்கி வாழ்வாயாக.