| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2792 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இருளின் செறிவாலே நீருக்கும் தரைக்கும் வாசயிறயாதேஒரு கழியிலே சென்றிழிந்தாள்; கழிதான் இரைத்துக்கொண்டு ஓடாநிற்குமாகையாலே அது தன்னைப்போலவே பகவத் விஷயத்திலீடுபாட்டாலே உறக்கமற்றுக் கதறுகின்றதாகக் கொண்டு ஐயோ! சகடாஸூரபங்கம் பண்ணின பெருமானுi.டய செயலிலே நீயும் அகப்பட்டாயோ வென்கிறாள்.) 8 | இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய் மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8 | இருளின்,irulil - இருட்டினுடைய திணி,thini - செறிந்த வண்ணம்,vannam - நிறத்தை யுடைய மா,maa - பெரிய நீர்சுழியே,neerchuzhiyae - நீருள்ள சுழியே! போய்,poi - மிகவும் மருள் உற்று,marul utru - மருட்சி யடைந்து இரா பகல்,ira pakal - இரவும் பகலும் துஞ்சிலும்,thunjilum - முடிந்தாலும் நீ துஞ்சாய்,nee thunjaay - நீ ஓய்கின்றாயில்லை; ஆல்,aal - ஆதலால் உருளும் சகடம்,urulum sakadam - உருளுகின்ற சகடத்தைத் திருவடிகளா லுதைத்தொழிந்த பெருமானார்,perumanaar - எம்பெருமானுடைய அருளின்,arulin - க்ருபாகுணத்திலுண்டான பெரு நசையால்,peru nasaiyaal - பேராசையினால் ஆழாந்து,aazhaanthu - ஆழ்ந்து நொந்தாயே,nondhaayae - நோவுபட்டாயோ? |