| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2793 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி விரஹஜ்வரம் பற்றி யொரியா நின்றது’ என்று கொண்டு நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ வென்கிறாள்.) 9 | நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய் செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான் அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9 | நந்தா விளக்கமே,nandhaa vilakkamae - அழிவில்லாத விளக்கே ! அளியத்தாய்,aliyathaay - இரங்கத்தகுதியுடைய நீயும்,neeyum - நீயும் நொந்து ஆரா காதல் நோய்,nondhu aaraa kaadal noi - நோவுபட்டு மாளாத ஆசை நோயானது மெல் ஆவி,mel aavi - மெல்லிய பிராணனையும் உள் உலர்த்த,ul ularttha - உள்ளே உலர்த்த, செம் தாமரை தடகண்,sem thaamarai thadakan - சிவந்த தாமரை மலர் போன்ற பெரிய கண்களையும் செம் கனி வாய்,sem kani vaay - சிவந்த கோவைக்கனி போன்ற வாயையுமுடைய எம்பெருமான்,emperumaan - எம்பெருமானது அம் தண்துழாய் தாமம்,am thandhuzhaay thaamam - அழகிய குளிர்ந்ததிருத்துழாய் மாலையின் மீதுள்ள ஆசையால்,aasaiyaal - விருப்பத்தினால் வேவாயே,vevaayae - வேகின்றாயோ? |