Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2793 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2793திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி விரஹஜ்வரம் பற்றி யொரியா நின்றது’ என்று கொண்டு நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ வென்கிறாள்.) 9
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9
நந்தா விளக்கமே,nandhaa vilakkamae - அழிவில்லாத விளக்கே !
அளியத்தாய்,aliyathaay - இரங்கத்தகுதியுடைய
நீயும்,neeyum - நீயும்
நொந்து ஆரா காதல் நோய்,nondhu aaraa kaadal noi - நோவுபட்டு மாளாத ஆசை நோயானது
மெல் ஆவி,mel aavi - மெல்லிய பிராணனையும்
உள் உலர்த்த,ul ularttha - உள்ளே உலர்த்த,
செம் தாமரை தடகண்,sem thaamarai thadakan - சிவந்த தாமரை மலர் போன்ற பெரிய கண்களையும்
செம் கனி வாய்,sem kani vaay - சிவந்த கோவைக்கனி போன்ற வாயையுமுடைய
எம்பெருமான்,emperumaan - எம்பெருமானது
அம் தண்துழாய் தாமம்,am thandhuzhaay thaamam - அழகிய குளிர்ந்ததிருத்துழாய் மாலையின் மீதுள்ள
ஆசையால்,aasaiyaal - விருப்பத்தினால்
வேவாயே,vevaayae - வேகின்றாயோ?