| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2794 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இப்படி அளவுகடந்த ஆர்த்தியோடே துடிக்கிற ஆழ்வாரைக் குளிர நோக்கி ஒருவாறு சுகப்படுத்த வந்து நெருங்கிய எம்பெருமானைக் குறித்து, பிரானே! சிலநாள் நலிந்து விடுவதன்றியே மேன்மேலும் மிகவும் நலிகின்ற விரஹவ்யஸநமானது ஏற்கனவே மெலிந்துபோன ஆத்மாவை மிகவுதட நோவு படுத்த இரவும்பகலும் இடைவிடாதே உன்னுடைய குணசேஷ்டிதங்களையே நினைந்து நிநைந்து உள்கரைந்து உருகும்படியாகச் செய்திட்டாய்; இவ்வளவு செய்த நீ இனி ஒருகாலமும் என்னைக் கைவிடாதே கொள்ளவேணும் என்று பிரார்த்திப்பதாய்ச் சொல்லுகிறது இப்பாசுரம்.) 10 | வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய் மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10 | மா வாய் பிளந்து,maa vaay pilandhu - குதிரை வடிவாக வந்த கேசி யென்னு மசுரனுடைய வாயைப் பிளந்தவனும் மருது இடை போய்,maruthu idai poi - இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று அவற்றை முறித்துத் தள்ளினவனும் மண் அளந்த,man alandha - (த்ரிவிக்ரமனாய்ப்) பூமியை அளந்து கொண்டவனுமான மூவா முதல்வா,moo va mutalva - அழியாமுதல்வனே! வேவு ஆரா,vevu aaraa - எவ்வளவு வேவச் செய்தும் த்ருப்தியடையாத வேட்கை நோய்,veṭkai noay - ஆசை நோயானது மெல் ஆவி,mel aavi - மெல்லிய ஆம்மாவை உள் உலர்த்த,ul ularttha - குரத்துவற்றாக வற்றுவிக்க இராப் பகல்,iraab pagal - இரவும் பகலும் ஓவாது,oavaadhu - இடைவிடாமல் உன்பாலே,unpaale - உன்னிடத்திலேயே வீழ்த்து,veelthu - ஈடுபடுத்தி ஒழிந்தாய்,ozhindhaay - உபேக்ஷரித்துவிட்டாய்; (போனது போகட்டும்) இனி,ini - இனிமேல் எம்மை,emmai - எம்மை சோரேல்,sorel - கைவிடவேண்டா. |