Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2796 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2796திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (கண்ணபிரானே உலகுக்கெல்லாம் நிர்வாஹகனென்கிறார். மோக்ஷம் முதலிய ஸகல புருஷார்த்தங்களையும் அளித்தருள்பவனாய், எண்ணிறந்த திருக்குணங்களையுடையனாய் அக்குணங்களைக்காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்டவனாய், பிரளயாபத்து வந்தபோது பூமி முதலான ஸகல லோகங்களையும் ஒருசேரத் திருவயிற்றிலே வைத்து நோக்குபவனான நமது கண்ணபிரானே உலகுக் கெல்லாம் கண்ணாயிருப்பவன்) 1
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1
திண்,thin - திண்மையை யுடைய
நன்,nan - நல்ல
வீடு முதல்,veedu mudhal - மோக்ஷம் முதலாக
முழுதும் ஆய்,muzhudum aay - எல்லாவற்றையும் அளிப்பவனாய்
ஏண்ணின் மீதியன்,aennin meedhiyan - நினைவுக்கு அப்பாற்பட்டவனாய்
எம்பெருமான்,emperumaan - எமக்கு ஸ்வாமியாய்
மண்ணும் விண்ணும் எல்லாம்,mannum vinnnum ellaam - பூமியும் ஆகாசமுமாகிய முழுவதையும்
உடன் உண்ட,udan unta - ஒருங்கே அமுது செய்தவனான
நம் கண்ணன்,nam kannan - நமது கண்ணபிரானே
கண்,kan - (உலகுக்கு) இறைவன்
அல்லது,allathu - அல்லாமல்
ஓர்கண்,orkan - வேறொரு தலைவன்
இல்லை,illai - இல்லை