Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2797 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2797திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (“நங்கண்ணன் கண்ணல்லதில்லையோர்கண்ணே”— என்றருளிச் செய்த ஆழ்வாரை நோக்கிச்சிலர் ’இப்படிச் சொல்லலாமோ.? பிரமன் சிவன் முதலானாரும் ஈச்வரர்கள் என்று காட்டுகின்ற பிரமாணங்கள் இல்லையோ? என்ன; அவர்களது சரித்திரங்களை ஆராய்ந்துபார்த்தால் அவர்கள் ஈச்வரர்களாகத் தகுதியில்லை; ஆபத்து வந்த காலத்திலே அவர்களைக் காத்தருளினவனாக ப்ரஸித்தி பெற்ற எம்பெருமானே ஈச்வரன் என்று நிலைநாட்டுகிறாரிதில். *வேதாபஹார குருபாதக * இத்யாதி ஸ்தோத்ர ரத்த ஸ்ரீஸிக்திக்கு இப்பாசுரம் மூலம்.) 2
ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2
மா பாவம் விட,maa paavam vida - மிகப் பெரிதான (பிரமஹந்தி) பாபமானது விட்டு நீங்கும்படி
அரற்கு,ararku - சிவபிரானுக்கு
பிச்சை பெய்,picchai pei - பிக்ஷையிட்ட
கோபாலன்,gopaalan - கோபாலனென்கிற
கோள் அரி ஏறு அன்றி,kol ari eru andri - வலிமை தாங்கிய ஆண்சிங்கமல்லது (வேறொருவர்)
ஏழ் உலகும்,ez ulakum - ஏழுலகங்களையும்
ஈ பாவம் செய்து,ee paavam seythu - பாவம் தொலைந்ததாகச் செய்து
அருளால்,arulaal - கிருபையினாலே
அளிப்பார்ஆர்,alippaarAar - காப்பவருண்டோ?
ஏ பாவம்,e paavam - ஐயோ?
பரமே,parame - எம்பெருமானது ஏற்றத்தைச் சொல்லிமுடித்தல் நம்மாலாகுமோ?