| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2798 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (அயர்வறுமமரர்கள் தன்னுடைய சீலகுணத்தைக் கண்டு தொழுகைக்காக ஸர்வேச்வாரியான பெரிய பிராட்டியாரோடொக்கப் பிரமன் முதலானார்க்கும் தன்னை ஆச்ரயமாகக் கொடுத்துக் கொண்டிருக்கையாலும், ஸகல லோகங்களும் திருவடிகளினுள்ளே யடங்கும்படி அளந்தருளுகையாலும் இவனே ஸர்வேச்வரன், வேறில்லை யென்கிறார்.) 3 | ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3 | ஏறனை,aeraanai - ரிஷப வாஹனனான ருத்ரனையும் பூவளை,poovaalai - தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையனான பிரமனையும் பூ மகள் தன்னை , poo magal thanai - அலர்மேல் மங்கையான ஸ்ரீமஹா லக்ஷ்மியையும் வேறு அன்றி,veru andri - வேறாக அல்லாதபடி தன் உள்,than ul - தனது திருமேனியில் விண் தொழ,vin thozha - விண்ணுளார் தொழும்படி வைத்து,vaithu - இடங்கொடுத்து வைத்தவனாயும் மேல் தன்னை,mel thanai - மேலுலகத்தை மீதிட,meedhida - மேலிடும்படி நிமிர்ந்து,nimirndhu - வளர்ந்து மண்,man - பூமியை கொண்ட,konda - அளந்து கொண்டவனாயுமிரா நின்ற மால் தனில் மிக்கும்,maal thanil mikkum - ஸர்வேச்வரனுக்கு மேற்படவும் ஓர்தேவும் உளதே,oartevum uladhe - ஒரு தெய்வமும் உண்டோ? |