Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2798 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2798திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (அயர்வறுமமரர்கள் தன்னுடைய சீலகுணத்தைக் கண்டு தொழுகைக்காக ஸர்வேச்வாரியான பெரிய பிராட்டியாரோடொக்கப் பிரமன் முதலானார்க்கும் தன்னை ஆச்ரயமாகக் கொடுத்துக் கொண்டிருக்கையாலும், ஸகல லோகங்களும் திருவடிகளினுள்ளே யடங்கும்படி அளந்தருளுகையாலும் இவனே ஸர்வேச்வரன், வேறில்லை யென்கிறார்.) 3
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3
ஏறனை,aeraanai - ரிஷப வாஹனனான ருத்ரனையும்
பூவளை,poovaalai - தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையனான பிரமனையும்
பூ மகள் தன்னை , poo magal thanai - அலர்மேல் மங்கையான ஸ்ரீமஹா லக்ஷ்மியையும்
வேறு அன்றி,veru andri - வேறாக அல்லாதபடி
தன் உள்,than ul - தனது திருமேனியில்
விண் தொழ,vin thozha - விண்ணுளார் தொழும்படி
வைத்து,vaithu - இடங்கொடுத்து வைத்தவனாயும்
மேல் தன்னை,mel thanai - மேலுலகத்தை
மீதிட,meedhida - மேலிடும்படி
நிமிர்ந்து,nimirndhu - வளர்ந்து
மண்,man - பூமியை
கொண்ட,konda - அளந்து கொண்டவனாயுமிரா நின்ற
மால் தனில் மிக்கும்,maal thanil mikkum - ஸர்வேச்வரனுக்கு மேற்படவும்
ஓர்தேவும் உளதே,oartevum uladhe - ஒரு தெய்வமும் உண்டோ?