திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2798 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2798திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (அயர்வறுமமரர்கள் தன்னுடைய சீலகுணத்தைக் கண்டு தொழுகைக்காக ஸர்வேச்வாரியான பெரிய பிராட்டியாரோடொக்கப் பிரமன் முதலானார்க்கும் தன்னை ஆச்ரயமாகக் கொடுத்துக் கொண்டிருக்கையாலும், ஸகல லோகங்களும் திருவடிகளினுள்ளே யடங்கும்படி அளந்தருளுகையாலும் இவனே ஸர்வேச்வரன், வேறில்லை யென்கிறார்.) 3
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3
பதவுரை Show / Hide
ஏறனை,aeraanai - ரிஷப வாஹனனான ருத்ரனையும்
பூவளை,poovaalai - தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையனான பிரமனையும்
பூ மகள் தன்னை , poo magal thanai - அலர்மேல் மங்கையான ஸ்ரீமஹா லக்ஷ்மியையும்
வேறு அன்றி,veru andri - வேறாக அல்லாதபடி
தன் உள்,than ul - தனது திருமேனியில்
விண் தொழ,vin thozha - விண்ணுளார் தொழும்படி
வைத்து,vaithu - இடங்கொடுத்து வைத்தவனாயும்
மேல் தன்னை,mel thanai - மேலுலகத்தை
மீதிட,meedhida - மேலிடும்படி
நிமிர்ந்து,nimirndhu - வளர்ந்து
மண்,man - பூமியை
கொண்ட,konda - அளந்து கொண்டவனாயுமிரா நின்ற
மால் தனில் மிக்கும்,maal thanil mikkum - ஸர்வேச்வரனுக்கு மேற்படவும்
ஓர்தேவும் உளதே,oartevum uladhe - ஒரு தெய்வமும் உண்டோ?