| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2800 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (எம்பெருமானுக்குப் பரத்வ ஸ்தாபங்களானவற்றுக்குள்ளே புண்டாரிகாக்ஷத்வமும் ஒன்றாதலால் அதனை இங்கு அருளிச்செய்கிறார்.) 5 | தகும் சீர்த் தனி முதலினுள்ளே மிகும் தேவும் எப்பொருளும் படைக்க தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5 | தகும்,Thagum - தகும் (ஸ்ருஷ்டி முதலியவற்றுக்குத்) தகுதியான சீர்,Seer - (சிறந்த ஞானம் முதலிய ) குணங்களையுடையனான தன்,Than - தன்னுடைய தனி,Thani - ஒப்பற்ற முதலினுள்ளே,Mudhalinule - உலக காரணமான ஸங்கல்பத்திற்குள்ளே மிகும்,Migum - மிகுந்த தேவும்,Thevum - (பிரமன் முதலிய) தேவர்களையும் எப்பொருளும்,Epporulum - (மணிசர் முதலிய) மற்றெல்லாப் பொருள்களையும் படைக்க,Padaikka - படைப்பதற்கு தகும்,Thagum - தகுதி பொருந்தியவனும் கோலம் தாமரை கண்ணன்,Kolam thamarai kannan - அழகிய புண்டாரிகாக்ஷனுமாகிய எம்மான்,Emmaan - எம்பெருமானைவிட மிகும்சோதி,Migumsothi - மிகுந்த ஒளி பொருந்திய மேல்,Meel - மேலான பொருளை அறிவார்யவர்,Arivaaryavar - அறிபவர் யாவர்? |