திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2801 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2801திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (சேதநாசேநாத்மகமான ஸகல பதார்த்தங்களையும் தன் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷக்கையாலே அவனே ஈச்சரனென்கிறார்.) 6
யவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6
பதவுரை Show / Hide
யவரும்,Yavarum - சேதனர்கள் யாவரும்
யாவையும்,Yaavaiyum - அசேதனங்கள் யாவையும்
எல்லாப் பொருளும்,Ellaap porulum - ஆகிய எல்லாப் பொருள்களும்
கவர்வு இன்றி,Kavarvu indri - நெருக்கமின்றியே
தன்னுள்,Thannul - தனது திருவயிற்றினுள்ளே
ஒடுங்க நின்ற,Odungu ninra - அடங்கும்படி நின்றவனும்
பவர் கொள்,Pavar kol - பரப்பைப்கொண்ட
ஞானம் வெள்ளம்,Gnaanam vellam - ஞானமிகுதியை
சுடர்,Sudar - தனக்குக் காந்தியாகவுடைய
மூர்த்தி,Moorthi - ஸ்வாமியுமான
அவர்,Avar - அந்த ஸர்வேச்வரன்
எம்,Em - எமது அநுபவத்திற்குரிய
அம்,Am - அழகிய
ஆழி பள்ளியார்,Aazhi palliyar - ப்ரளயார்ணவ சயநராவர்
(ஆழியம்பள்ளியார் = திருப்பாற்கடலிற் கிடந்த கிடையைச் சொல்லவுமாம்
ப்ரளயார்ணவத்திலே ஆபத் ஸகனாய்க் கண் வளர்ந்தபடியைச் சொல்லவுமாம்)