| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2801 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (சேதநாசேநாத்மகமான ஸகல பதார்த்தங்களையும் தன் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷக்கையாலே அவனே ஈச்சரனென்கிறார்.) 6 | யவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6 | யவரும்,Yavarum - சேதனர்கள் யாவரும் யாவையும்,Yaavaiyum - அசேதனங்கள் யாவையும் எல்லாப் பொருளும்,Ellaap porulum - ஆகிய எல்லாப் பொருள்களும் கவர்வு இன்றி,Kavarvu indri - நெருக்கமின்றியே தன்னுள்,Thannul - தனது திருவயிற்றினுள்ளே ஒடுங்க நின்ற,Odungu ninra - அடங்கும்படி நின்றவனும் பவர் கொள்,Pavar kol - பரப்பைப்கொண்ட ஞானம் வெள்ளம்,Gnaanam vellam - ஞானமிகுதியை சுடர்,Sudar - தனக்குக் காந்தியாகவுடைய மூர்த்தி,Moorthi - ஸ்வாமியுமான அவர்,Avar - அந்த ஸர்வேச்வரன் எம்,Em - எமது அநுபவத்திற்குரிய அம்,Am - அழகிய ஆழி பள்ளியார்,Aazhi palliyar - ப்ரளயார்ணவ சயநராவர் (ஆழியம்பள்ளியார் = திருப்பாற்கடலிற் கிடந்த கிடையைச் சொல்லவுமாம் ப்ரளயார்ணவத்திலே ஆபத் ஸகனாய்க் கண் வளர்ந்தபடியைச் சொல்லவுமாம்) |