திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2802 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2802திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸகல லோகங்களுக்கும் ஆபத்திலே இடங்கொடுக்கையாகிற சிறந்த ஔதார்யத்தையடையனாய், ஸகல லோகத்தையம் திருவயிற்றிலே வைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளும்படியான அகடிதகடநா ஸாமாத்தியத்தையுடையனான ஸர்வேச்வரனுடைய திவ்ய சேஷ்டிதங்களை ஆர்அறிய வல்லார்? என்னும் முகத்தாலே, இப்படிப்பட்ட அகடிதகடநா ஸமர்த்தனுக்கே ஸர்வேச்வரத்வம் தகும் என்கிறாராயிற்று) 7
பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும் வள்ளல் வல் வயிற்றுப் பெருமான் உள்ளுள்ளார் அறிவார் அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7
பதவுரை Show / Hide
பள்ளி,Palli - படுக்கை
ஆல் இலை,Aal ilai - ஆலந்தளிராக
ஏழ் உலகும்,Ezh ulagum - ஏழுலகங்களையும்
கொள்ளும்,Kollum - கொள்ளக் கடவதான
வல்,Val - உறுதியான
வயிறு,Vayiru - திருவயிற்றையுடையனான
பெருமான்,Perumaan - பெரியோனாகிய
அவன் தன்,Avan than - அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய
கள்ளம்,Kallam - ஒருவராலுமறியக்கூடாததான
மாயம்,Maayam - ஆச்சரீரயமான
மனம் கருத்து,Manam karuthu - திருவுள்ளக்கருத்தை
உள்ளுள்,Ullul - மனத்தினால்
அறிவார்ஆர்,Arivaarar - அறியவல்லவர் யாவர்?