Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2803 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2803திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாக வுடையவனாகையாலே இவனுக்கே ஈச்வரத்வம் பொருந்துமென்கிறார்.) 8
ருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8
கருத்தின்,Karuthin - தனது ஸங்கல்பத்தினாலே
தேவும்,Thevum - தேவர்களையும்
எல்லாப் பொருளும்,Ellaap porulum - மற்றெல்லாப் பொருள்களையும்
வருத்தித்த,Varutthitha - வ்ருத்தி செய்த (உண்டாக்கின)
மாயம்,Maayam - ஆச்சரீரயமான சக்தி முதலியவற்றையுடைய
பிரானை அன்றி,Piraanai andri - எம்பிரானைத் தவிர்த்து
மூ உலகும்,Moo ulagum - மூவுலகங்களையும்
திண் நிலை,Thin nilai - உறுதியான நிலைமையை யுடையனவாக
திருத்தி,Thiruththi - அமைத்து
தம் உள்,Tam ul - தம் நினைவுக்குள்ளே
இருத்தி,Iruththi - வைத்து
காக்கும்,Kaakkum - காப்பாற்றுவதையே
இயல்வினர்,Iyalvinar - இயற்கையாகவுடையவர்
ஆர்,Aar - எவர் ?