| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2805 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (எவர்களை நீங்கள் தெய்வமாகக் கருதுகின்றீர்களோ அவர்களும் எம்பெருமானையே பணிந்து துதிக்கின்றார்களாதலால் அவர்களது இசைவினாலும் எம்பெருமானுக்கே பரத்வமுண்டென்று எளிதில் அறியலாமே என்கிறார்.) 10 | கள்வா எம்மையும் ஏழுலகும் நின் னுள்ளே தோற்றிய இறைவ என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10 | வெள் ஏறன்,Vel yeran - வெளுத்த எருதை வாஹனமாகவுடைய சிவபிரானும் நான்முகன்,Naanmugan - பிரமனும் இந்திரன்,Indiran - இந்திரனும் வானவர்,Vaanavar - மற்றுமுள்ள தேவர்களும (ஒன்று கூடி) கள்வா,Kalva - “கள்வனே! எம்மையும்,Emmayum - எங்களையும் ஏழ் உலகும்,Ezhu ulagum - ஏழுலகங்களையும் நின் உள்ளே,Nin ulle - உனது ஸங்கல்பத்தினுள்ளே தோற்றிய,Thotriya - தோன்றுவித்த இறைவ,Iraiva - ஸ்வாமியே!” என்று,Enru - என்று சொல்லி புள் ஊர்தி,Pul oorthi - கருட வாஹனனாகிய ஸர்வேச்வரனுடைய கழல்,Kalzal - திருவடிகளை பணிந்து,Paninthu - வணங்கி ஏத்தவர்,yetthavar - துதிப்பர் |