Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2806 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2806திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (இத் திருவாய் மொழியைக் கருத்துடனே கற்று வல்லார்க்கு, எம்பெருமான் ஈச்வரனல்லன்’ என்று புத்தி பண்ணுதல். ‘இதர தேவதைகள் ஈச்வரர்கள்’ என்று புத்தி பண்ணதல் ஆகிற அவத்யமொன்றும் உண்டாகமாட்டாதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11
ஏத்த,yetha - (அனைவரும் துதிக்க
ஏழ் உலகும் கொண்ட,Ezhu ulagum konda - எல்லா வுலகங்களையு மளந்து கொண்ட
கோலம் கூத்தனை,Kolam kootthanai - அழகிய கூத்தனான எம்பெருமானைக் குறித்து
குருகூர்சடகோபன் சொல்,kurukoor sadagopan sol - ஆழ்வார் அருளிச் செய்த
வாய்த்த,Vaaytha - உலகுக்கு மஹா பாக்யமாகக் கிடைத்த
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தில்
இவை பத்து,Ivai pattu - இப் பத்துப் பாசுரங்களையும்
உடன்,Udan - அர்தத்தோடு (கற்று)
ஏத்த வல்லவர்க்கு,yetha vallavarkku - ஸ்துதி சொல்ல வல்லவர்கட்கு
ஓர் ஊனம் இல்லை,or oonam illai - ஒரு குறையுமில்லையாகும்