Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2808 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2808திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் நெஞ்சைக் கொண்டாடினார் சிறிது ஆராய்ந்து பார்த்தவாறே அந்த நெஞ்சை இசைவித்ததும் ஸர்வேச்வரனே யாதலால் அந்த எம்பெருமானையன்றோ கொண்டாடவேணுமென்று அது செய்கிறாரிப்பாட்டில்) 2
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே–2-3-2
ஒத்தார் மிக்காரை,Othaar mikkarai - ஸமான மானவர்களையும் மேற்பட்டவர்களையும்
இலை ஆய,Ilai aaya - உடையனல்லாத
மா மாயா,Maa maaya - பெரிய ஆச்சர்ய குணங்களை யுடைவனே!
எப்பொருட்கும்,Epporutkum - எல்லாப் பொருள்களுக்கும்
ஒத்தாய்,Othaay - ஒப்பாக அவதரித்தவனே!
(எப்பொருட்கட்கும்) உயிர்ஆய்,(Epporudhukkum) uyir-aaya - எல்லார்க்கும் பிராண பூதனாய்
என்னைப் பெற்ற,Ennaip petra - என்னை யுண்டாக்கின
அ தாய் ஆய்,A thaai aay - அந்தத் தாயாகியும்
தந்தை ஆய்,Thandhai aay - பிதாவாகியும்
அறியாதன அறிவத்த அத்தா,Ariyadhan ariyatha athaa - ஆசார்யனாகியும் உபகார கனானவனே!
நீ செய்தன,Nee seidhana - நீ செய்த உபகாரங்களை
அடியேன் அறியேன்,Adiyaen ariyaen - அடியேன் அளவிட்டறியகில்லேன்