| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2808 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் நெஞ்சைக் கொண்டாடினார் சிறிது ஆராய்ந்து பார்த்தவாறே அந்த நெஞ்சை இசைவித்ததும் ஸர்வேச்வரனே யாதலால் அந்த எம்பெருமானையன்றோ கொண்டாடவேணுமென்று அது செய்கிறாரிப்பாட்டில்) 2 | ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா! ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து, அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே–2-3-2 | ஒத்தார் மிக்காரை,Othaar mikkarai - ஸமான மானவர்களையும் மேற்பட்டவர்களையும் இலை ஆய,Ilai aaya - உடையனல்லாத மா மாயா,Maa maaya - பெரிய ஆச்சர்ய குணங்களை யுடைவனே! எப்பொருட்கும்,Epporutkum - எல்லாப் பொருள்களுக்கும் ஒத்தாய்,Othaay - ஒப்பாக அவதரித்தவனே! (எப்பொருட்கட்கும்) உயிர்ஆய்,(Epporudhukkum) uyir-aaya - எல்லார்க்கும் பிராண பூதனாய் என்னைப் பெற்ற,Ennaip petra - என்னை யுண்டாக்கின அ தாய் ஆய்,A thaai aay - அந்தத் தாயாகியும் தந்தை ஆய்,Thandhai aay - பிதாவாகியும் அறியாதன அறிவத்த அத்தா,Ariyadhan ariyatha athaa - ஆசார்யனாகியும் உபகார கனானவனே! நீ செய்தன,Nee seidhana - நீ செய்த உபகாரங்களை அடியேன் அறியேன்,Adiyaen ariyaen - அடியேன் அளவிட்டறியகில்லேன் |