| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2811 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (பிரளய வெள்ளத்திலே மூழ்க நின்ற ஜகத்தை யெடுத்தருளினாப் போலே ஸம்ஸார ஸாகரத்திலே மூழ்கிக் கிடக்கிற என்னை உன் திருவடிகளில் உறவையறிவித்து எடுத்தருளுகையாலே இனி யுன் திருவடிகளைப் பெற்றேனென்று மகிழ்ச்சி தோற்றப் பேசுகிறார்.) 5 | இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்! கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே! தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5 | யார்,Yaar - எப்படிப் பட்டவர்களுடையவும் ஞானங்களால்,Gnaanangalal - ஞான விசேஷங்களாலும் எடுக்கல் எழாத,Edugal ezhadha - க்ரஹிக்கப் பார்த்தாலும் க்;ரஹிக்க முடியாத எந்தாய்,Endhaay - எம்பெருமானே ! கனிவார்,Kanivaar - (உன் பக்கலில்) மனங்கனிந்தவர்களுக்கு வீடு இன்பமே,Veedu inbamae - மோக்ஷ ஆனந்தமே வடிவெடுத்தது போலிருப்பவனே கடல் படா,Kadal padaa - உப்புக் கடலிலுண்டாகாத என் அமுதே,En amudhe - எனக்கு போக்கியமான அம்ருதமே! தனியேன்,Thaniyaen - அத்விதீய பக்தனான என்னுடைய வாழ்,Vaazh - வாழ்ச்சிக்கு முதலே,Mudhale - முதற் காரணமே! பொழில் ஏழும்,Pozhil ezhum - ஏழுலகங்களையும் ஏனம் ஒன்று ஆய்,Enam ondru aay - ஒப்பற்ற வராஹ ரூபியாகி நுனி ஆர்,Nuni aar - கூர்மை மிகுந்த கோட்டில்,Kotil - கோரப்பல்லிலே வைத்தாய்,Vaithaay - வைத்தெடுத்தவனே! இனி,Ini - இது முதலாக உன பாதம்,Un paadham - உனது திருவடிகளை சேர்ந்தேனே,Saerndhaenae - அடியேன் பிரியா திருப்பவனே. |