| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2812 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (நான் எம்பெருமானைப் பெற்றது இன்றைக்கோ? இவ் வாத்மாவுள்ள போதே பிடித்து எம்பெருமானைப் பெற்றவனல்லேனோ என்கிறார். நெடுநாளாகப் பிரிந்திருந்த பிரிவின் வருத்தம் ஒன்றும் தெரியாதபடி எம்பெருமான் தன்னோடே கலந்ததனாலுண்டான களிப்பு இங்ஙனே பேசுவிக்கின்றது காண்மின்.) 6 | சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத் தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே–2-3-6 | சேர்ந்தார்,Serndhaar - பக்தர்களினுடைய தீ வினைகட்கு,Thee vinaikatku - கொடிய பாவங்களுக்கு அரு நஞ்சை,Aru nanjai - ஆற்ற வரிதான விஷமாயிருப்பவனும் திண் மதியை,Thin madhiyai - திடமான அத்யவஸாயத்தை அளித்தருள்பவனும் நீர்ந்தார் தம் மனத்து பிரியாது,Neerndhaar tham manathu piryaadhu - தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களான பரமை காந்திகளின் மனத்தை விட்டுப் பிரியாமல் அவர் உயிரை,Avar uyirai - அவர்களுக்கு உயிராயிருப்பவனும் சோர்ந்து போகல் கொடா,Soarndhu pogal koda - தன்னைப் பிரிந்து விஷயங்களில் போகக் கொடாத சுடரை,Sudarai - ஒளி யுருவாக வுள்ளவனும் அரக்கியை,Arakkiyai - ராக்ஷஸியான சூர்ப்பணகையினது மூக்கு,Mookku - மூக்கை ஈர்ந்தாயை,Eerndhaayai - அறுத்தவனுமாகிய வுன்னை அடியேன்,Adiyaen - நான் முதல் முன்னமே,Mudhal munname - அநாதி காலமாக அடைந்தேன்,Adaindhaen - சேரப் பெற்றவன் |