Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2812 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2812திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (நான் எம்பெருமானைப் பெற்றது இன்றைக்கோ? இவ் வாத்மாவுள்ள போதே பிடித்து எம்பெருமானைப் பெற்றவனல்லேனோ என்கிறார். நெடுநாளாகப் பிரிந்திருந்த பிரிவின் வருத்தம் ஒன்றும் தெரியாதபடி எம்பெருமான் தன்னோடே கலந்ததனாலுண்டான களிப்பு இங்ஙனே பேசுவிக்கின்றது காண்மின்.) 6
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச்
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே–2-3-6
சேர்ந்தார்,Serndhaar - பக்தர்களினுடைய
தீ வினைகட்கு,Thee vinaikatku - கொடிய பாவங்களுக்கு
அரு நஞ்சை,Aru nanjai - ஆற்ற வரிதான விஷமாயிருப்பவனும்
திண் மதியை,Thin madhiyai - திடமான அத்யவஸாயத்தை அளித்தருள்பவனும்
நீர்ந்தார் தம் மனத்து பிரியாது,Neerndhaar tham manathu piryaadhu - தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களான பரமை காந்திகளின் மனத்தை விட்டுப் பிரியாமல்
அவர் உயிரை,Avar uyirai - அவர்களுக்கு உயிராயிருப்பவனும்
சோர்ந்து போகல் கொடா,Soarndhu pogal koda - தன்னைப் பிரிந்து விஷயங்களில் போகக் கொடாத
சுடரை,Sudarai - ஒளி யுருவாக வுள்ளவனும்
அரக்கியை,Arakkiyai - ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கு,Mookku - மூக்கை
ஈர்ந்தாயை,Eerndhaayai - அறுத்தவனுமாகிய வுன்னை
அடியேன்,Adiyaen - நான்
முதல் முன்னமே,Mudhal munname - அநாதி காலமாக
அடைந்தேன்,Adaindhaen - சேரப் பெற்றவன்