Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2813 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2813திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் “அடியேனடைந்தேன் முதல் முன்னமே” என்றார் அதனால் தம்முடைய நித்ய ஸம்ச்லேஷத்தைத் தெரிவித்துக்கொண்ட ஆழ்வார் இக்கலவிக்கு விச்சேதம் பிறந்தால் என்செய்வது? என்று சங்கித்து, அப்படி ஒருகால் விச்லேஷம் பிறக்குமாகில் தாரிக்கமாட்டேனென்று திருவுள்ளத்திலே கொண்டருள வேணுமென்று இப்பாட்டிலருளிச் செய்கிறார்.) 7
முன்னல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!
பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா!
நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7
முன்,Mun - அநாதியாய்
நல்,Nal - விலக்ஷணமாய்
யாழ் பயில்,Yaazh payil - வீணையைப் பற்றி
நூல்,Nool - ஸங்கீத சாஸ்த்ரத்தின் படியேயான
நரம்பில்,Narambil - தந்திக் கம்பியிலே வருடப்பட்டு
முதிர்,Mudhir - முதிர்ந்த
சுவையே,Suvaiye - சுவை போன்றவனே! (பரம போக்யனே)!)
பல் நல்லார்,Pal nallaar - பல விலக்ஷணர்கள்
பயிலும்,Payilum - நித்யானுபவம் பண்ணப் பெற்ற
பரமனே,Paramane - பரம புருஷனே!
பவித்திரனே,Pavithirane - பரிசுத்தனே!
கன்னலே,Kannale - கரும்பின் சாறு போன்றவனே!
அமுதே,Amudhe - அமிருதம் போன்றவளே!
கார்முகிலே,Kaarmugile - காளமேகத் திருவுருவளே!
என் கண்ணா,En kanna - எனக்கு நித்யானுபவத்திற்கு உரிய கண்ண பிரானே!
நின்னலால்,Ninnalaal - உன்னை யன்றி
இலேன் காண்,Ilaen kaan - (வேறொருவரைத் தஞ்சமாக) உடையனல்லேன் காண்
என்னை,Ennai - இப்படிப்பட்ட என்னை
நீ குறிக்கொள்,Nee kuri kol - நீயே திருவுள்ளத்தில் கொண்டருள வேணும்.