| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2813 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் “அடியேனடைந்தேன் முதல் முன்னமே” என்றார் அதனால் தம்முடைய நித்ய ஸம்ச்லேஷத்தைத் தெரிவித்துக்கொண்ட ஆழ்வார் இக்கலவிக்கு விச்சேதம் பிறந்தால் என்செய்வது? என்று சங்கித்து, அப்படி ஒருகால் விச்லேஷம் பிறக்குமாகில் தாரிக்கமாட்டேனென்று திருவுள்ளத்திலே கொண்டருள வேணுமென்று இப்பாட்டிலருளிச் செய்கிறார்.) 7 | முன்னல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே! பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே! கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா! நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7 | முன்,Mun - அநாதியாய் நல்,Nal - விலக்ஷணமாய் யாழ் பயில்,Yaazh payil - வீணையைப் பற்றி நூல்,Nool - ஸங்கீத சாஸ்த்ரத்தின் படியேயான நரம்பில்,Narambil - தந்திக் கம்பியிலே வருடப்பட்டு முதிர்,Mudhir - முதிர்ந்த சுவையே,Suvaiye - சுவை போன்றவனே! (பரம போக்யனே)!) பல் நல்லார்,Pal nallaar - பல விலக்ஷணர்கள் பயிலும்,Payilum - நித்யானுபவம் பண்ணப் பெற்ற பரமனே,Paramane - பரம புருஷனே! பவித்திரனே,Pavithirane - பரிசுத்தனே! கன்னலே,Kannale - கரும்பின் சாறு போன்றவனே! அமுதே,Amudhe - அமிருதம் போன்றவளே! கார்முகிலே,Kaarmugile - காளமேகத் திருவுருவளே! என் கண்ணா,En kanna - எனக்கு நித்யானுபவத்திற்கு உரிய கண்ண பிரானே! நின்னலால்,Ninnalaal - உன்னை யன்றி இலேன் காண்,Ilaen kaan - (வேறொருவரைத் தஞ்சமாக) உடையனல்லேன் காண் என்னை,Ennai - இப்படிப்பட்ட என்னை நீ குறிக்கொள்,Nee kuri kol - நீயே திருவுள்ளத்தில் கொண்டருள வேணும். |