| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2814 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (நெடுங்காலம் வருந்தி ஸாதிக்க வேண்டிய புருஷர்ர்த்தத்தை இந்த ஜன்மந் தன்னிலே அற்பகாலத்தில் எளிதாகப் பெற்றேனென்று பகவத் கடாக்ஷத்தின் பெருமையைப் பேசுகிறார்.) 8 | குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும் கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான் உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித் துண்ணும் அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே–2-3-8 | உறி கொண்ட,Uri konda - உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெய்,Vennai - வெண்ணெயையும் பால்,Paal - பாலையும் ஒளித்து உண்ணும்,Ozhithu unnum - மறைந்திருந்து அமுது செய்த அம்மான் பின்,Ammaan pin - எம்பெருமான் பின்னே நெறிக் கொண்ட,Nerik konda - அவன் போன வழியே போகிற நெஞ்சன் ஆய்,Nenjan aay - மனத்தை யுடையேனாய் பிறவி துயா,Piravi thuya - ஸம்ஸாரத் தொல்லைகளை கடிந்து,Kadindhu - நிராகரித்து குறிக்கொள் ஞானங்களால்,Kuri kol gnaanangalal - யம நியமாதிகளாலே கொள்ளப் படுவதான ஞானங்களால் -விசேஷங்களாலே (உபாஸநாதிகளாலே) எனை ஊழி,Enai oozhi - அநேக கல்ப காலங்களில் செய்,Sey - செய்யப்பட வேண்டியதான தவமும்,Thavamum - பக்தி யோகமாகிற தவத்தின் பயனை கிறிக் கொண்டு,Kirik kondru - (பகவத் க்ருபையாகிற) உபாயத்தைக் கொண்டு இப் பிறப்பே,Ippirappe - இந்தப் பிறவியில் தானே சில நாளில்,Sila naalil - சில நாட்களில் யான்,Yaan - அகிஞ்சநனாகிய அடியேன் எய்தினன்,Eydinan - அடைந்தேன். |