| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2815 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (பரம பதத்திலே ப்ராப்தமாகக் கூடிய பகவத் குணாநுபவத்தை நான் இந் நிலத்திலேயே பெற்றேனென்று களித்துப் பேசுகிறாரிதில்.) 9 | கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்ச் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9 | கடி வார்,Kadi vaar - பரிமளம் மிக்க தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய திருத் துழாய் மாலையை யுடையனான கண்ணன்,Kannan - ஸ்ரீ க்ருஷ்ணனாய் விண்ணவர் பெருமான்,Vinnavar perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வானம்,Vaanam - பரம பதத்திலும் படி இறந்த,Padi irandha - ஒத்தார் இல்லாதவனான பரமன்,Paraman - பரம புருஷனாய் பவித்திரன்,Pavithiran - பரிசுத்தனான எம்பெருமானுடைய சீர்,Seer - திருக் குணங்களிலே செடி ஆர்நோய்கள் கெட,Chedi aarnoygal keda - தூறு நெருங்கினாற்போலே நெருங்கி யிருக்கின்ற ஸம்ஸார வியாதிகள் தொலையும்படி படிந்து,Padindhu - கிட்டி குடைந்து ஆடி,Kudaindhu aadi - அவகாஹத்து அடியேன்,Adiyaen - தாஸனாகிய நான் வாய் மடுத்து பருகி,Vaai maduthu parugi - வாயாரப் பருகி களித்தேன்,Kalithaen - களிக்கப் பெற்றேன். |