Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2815 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2815திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (பரம பதத்திலே ப்ராப்தமாகக் கூடிய பகவத் குணாநுபவத்தை நான் இந் நிலத்திலேயே பெற்றேனென்று களித்துப் பேசுகிறாரிதில்.) 9
கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்ச்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9
கடி வார்,Kadi vaar - பரிமளம் மிக்க
தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய திருத் துழாய் மாலையை யுடையனான
கண்ணன்,Kannan - ஸ்ரீ க்ருஷ்ணனாய்
விண்ணவர் பெருமான்,Vinnavar perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்
வானம்,Vaanam - பரம பதத்திலும்
படி இறந்த,Padi irandha - ஒத்தார் இல்லாதவனான
பரமன்,Paraman - பரம புருஷனாய்
பவித்திரன்,Pavithiran - பரிசுத்தனான எம்பெருமானுடைய
சீர்,Seer - திருக் குணங்களிலே
செடி ஆர்நோய்கள் கெட,Chedi aarnoygal keda - தூறு நெருங்கினாற்போலே நெருங்கி யிருக்கின்ற ஸம்ஸார வியாதிகள் தொலையும்படி
படிந்து,Padindhu - கிட்டி
குடைந்து ஆடி,Kudaindhu aadi - அவகாஹத்து
அடியேன்,Adiyaen - தாஸனாகிய நான்
வாய் மடுத்து பருகி,Vaai maduthu parugi - வாயாரப் பருகி
களித்தேன்,Kalithaen - களிக்கப் பெற்றேன்.