| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2816 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் “அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! பாரிபூர்ணமான பேறுபெற்று விட்டீரன்றோ? இனியொரு குறையில்லையே; இனியுமக்கு நான் செய்யவேண்டியது ஒன்றுமில்லையே’ என்ன அதற்கு ஆழ்வார், ‘பெருமானே! இவ்விபூதியில் தான் இப்போது ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கிறேனென்பதில் ஸந்தேஹமில்லை; ஆனாலும் வி‘யாந்தரங்களின் நடுவே என்னை வைத்திருக்கின்றாயாதலால் இவ்வானந்தம் இங்கே நித்தியமாய்ச் செல்லாதாகையாலே ஒரு அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்று அங்கு அடியார்களின் கோஷ்டியிலே அந்வயிக்க வேண்டிய தொன்றுண்டு அது எப்போது ப்ராப்தமாகுமோ? என்கிறார்.) 10 | களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10 | களிப்பும்,Kalipum - அல்ப ஸந்தோஷமும் கவர்வும்,Kavarvum - மனக் கவலையும் அற்று,Attru - ஒழிந்து பிறப்பு,Pirappu - ஜன்மமும் பிணி,Pini - வியாதிகளும் மூப்பு,Moopu - கிழத் தனமும் இறப்பு,Irappu - மரணமும் அற்று,Attru - ஒழிந்து ஒளிக் கொண்ட சோதியம் ஆய்,Olik kondta sodiyam aay - ஞானம் முதலிய ஒளிகளுக்கு ஒளியைத் தருவதாய் தான ஒளி யுருவை யுடையோமாய். துளிக்கின்ற,Thulikkindra - மழை பொழிகின்ற வான்,Vaan - ஆகாசத்தையும் இ நிலம்,I nilam - இந்தப் பூமியையும் சுடர்,Sudar - ஒளி மிக்க ஆழி சங்கு,Aazhi sanggu - திருவாழி திருச்சங்குகளை ஏந்தி,Yendhi - தாங்கி அளிக்கின்ற,Alikkindra - ரஷித்தருள்கின்ற மாயன் பிரான்,Maayan piran - ஆச்சர்ய சேஷ்டிதனான பரம புருஷனுடைய அடியார்கள்,Adiyaargal - பக்தர்களினுடைய குழாங்களை,Kulangalai - கூட்டங்களை உடன் கூடுவது,Udan kooduvadhu - சேர்த்து அநுபவிக்கப் பெறுவது என்று கொல்,Endru kol - என்றைக்கோ? |