| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2818 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (ப்ரஹ்லாதாழ்வான் அபேக்ஷரித்த ஸமயத்திலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் அந்தோ! எனக்கு உதவுகின்றிலனே யென்று பெண் பிள்ளை வருந்துவதாகத் திருத்தாய் சொல்லுகிறாள்.) 1 | ஆடியாடி யகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1 | இ வாள் நுதல்,e vaal nuthal - ஒளி பொருந்திய நெற்றியை யுடையளான இப்பராங்குச நாயகி ஆடி ஆடி,Aadi aadi - பலகாலும் ஆடி அகம் கரைந்து,Agam karainthu - மனமுருகி இசை பாடி பாடி,Isai paadi paadi - பகவத் கீர்த்தனங்களைப் பலகாலும்பாடி கண் நீர்மல்கி,Kan neermalgi - கண்களில் நீர்நிரம்பப் பெற்று எங்கும்,Engum - எவ்விடத்தலும நாடி நாடி,Naadi naadi - அவன் வரவைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து நரசிங்கா என்று,Narasinga endru - நரசிங்கமூர்த்தியே! என்று கதறி வாடி வாடும்,Vaadi vaadum - (அவன் வரக்காணமையாலே) மிகவும் வாடுகின்றாள் |