Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2818 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2818திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (ப்ரஹ்லாதாழ்வான் அபேக்ஷரித்த ஸமயத்திலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் அந்தோ! எனக்கு உதவுகின்றிலனே யென்று பெண் பிள்ளை வருந்துவதாகத் திருத்தாய் சொல்லுகிறாள்.) 1
ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1
இ வாள் நுதல்,e vaal nuthal - ஒளி பொருந்திய நெற்றியை யுடையளான இப்பராங்குச நாயகி
ஆடி ஆடி,Aadi aadi - பலகாலும் ஆடி
அகம் கரைந்து,Agam karainthu - மனமுருகி
இசை பாடி பாடி,Isai paadi paadi - பகவத் கீர்த்தனங்களைப் பலகாலும்பாடி
கண் நீர்மல்கி,Kan neermalgi - கண்களில் நீர்நிரம்பப் பெற்று
எங்கும்,Engum - எவ்விடத்தலும
நாடி நாடி,Naadi naadi - அவன் வரவைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து
நரசிங்கா என்று,Narasinga endru - நரசிங்கமூர்த்தியே! என்று கதறி
வாடி வாடும்,Vaadi vaadum - (அவன் வரக்காணமையாலே) மிகவும் வாடுகின்றாள்