| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2819 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (வாணனுடைய ஆயிரந்தோள்களையுந் துணித்து உகக்கும் அநிருத்தாழ்வானுக்கும் அத்தனைகாரியஞ் செய்தருளின நீர்இப்பெண்பிள்ளை திறத்தில் இரங்காதிருப்பது என்னோவென்கிறாள்.) 2 | வாணுதல் இம்மடவரல் உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக் காண நீர் இரக்கமிலீரே–2-4-2 | வாள் நுதல்,Vaal nuthal - ஒளிமிக்க நெற்றியையுடைய இ மடவரல்,e madavaral - (பராங்குசநாயகி யென்னும்) இம்மடத்தை உம்மை,Ummai - (அழகிற்சிறந்த) உம்மை காணும் ஆசையுள்,Kaanum aasaiyul - காணவேணுமென்ற ஆசையிலகப்பட்டு நைகின்றாள்,Naikindraal - சிதிலையாகின்றாள்; விறல்,Viral - வலிமையையுடைய வாணன்,Vaanan - பாணாஸசரனுடைய ஆயிரம் தோள்,Aayiram thol - ஆயிரம் புஜங்களையும் துணித்தீர்,Thuniththir - அறுத்தொழித்தவரே! உம்மை காண,Ummai kaana - (இவன்) உம்மைக்காணுமாறு நீர்இரக்கம் இலீர்,Neerirakkam ileer - நீர் தயை செய்யாமலிருக்கின்றீர் |