Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2819 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2819திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (வாணனுடைய ஆயிரந்தோள்களையுந் துணித்து உகக்கும் அநிருத்தாழ்வானுக்கும் அத்தனைகாரியஞ் செய்தருளின நீர்இப்பெண்பிள்ளை திறத்தில் இரங்காதிருப்பது என்னோவென்கிறாள்.) 2
வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2
வாள் நுதல்,Vaal nuthal - ஒளிமிக்க நெற்றியையுடைய
இ மடவரல்,e madavaral - (பராங்குசநாயகி யென்னும்) இம்மடத்தை
உம்மை,Ummai - (அழகிற்சிறந்த) உம்மை
காணும் ஆசையுள்,Kaanum aasaiyul - காணவேணுமென்ற ஆசையிலகப்பட்டு
நைகின்றாள்,Naikindraal - சிதிலையாகின்றாள்;
விறல்,Viral - வலிமையையுடைய
வாணன்,Vaanan - பாணாஸசரனுடைய
ஆயிரம் தோள்,Aayiram thol - ஆயிரம் புஜங்களையும்
துணித்தீர்,Thuniththir - அறுத்தொழித்தவரே!
உம்மை காண,Ummai kaana - (இவன்) உம்மைக்காணுமாறு
நீர்இரக்கம் இலீர்,Neerirakkam ileer - நீர் தயை செய்யாமலிருக்கின்றீர்