| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2820 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பிரானே! நீர் ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகி போல்வார் ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்தமையாலன்றோ இப்பெண்பிள்ளை துடியாநின்றாள்; ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்க விட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறாநின்றாள்- என்கிறாள் திருத்தாய். இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு என்கிறாள் என்னவுமாம்.) 3 | இரக்க மனத்தோடு எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3 | இரக்கம் மனத்தோடு,Irakkam manathodu - நெகிழ்ச்சியை யுடைய நெஞ்சோடு (கூடிய) இவள்,eval - இப்பெண்பிள்ளை எரி அணை,Eri anai - நெருப்போடு ஸம்பந்தப்பட்ட அரக்கும்,Arakkum - (வன்மையான) அரக்கையும் மெழுகும்,Melugum - மெழுகையும் ஒக்கும்,Okkum - ஒத்திருக்கின்றாள்; இரக்கம் எழீர்,Irakkam ezeer - (இவள் திறத்து) இரக்கம் உண்டாகப் பெறுகின்றிலீர்; அரக்கன்,Arakkan - இராவணனுடைய இலங்கை,Ilangai - லங்காபுரியை செற்றீருக்கு,Setreerukku - (ஒரு பிராட்டிக்காக) த்வம்ஸம் செய்தருளின உமக்கு இதற்கு,Idharku - இவள் திறத்திலுண்டான உபேக்ஷைக்கு என் செய்தேன்,En seydhen - என்ன பரிஹாரம் பண்ணுவேன்? |