Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2820 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2820திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பிரானே! நீர் ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகி போல்வார் ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்தமையாலன்றோ இப்பெண்பிள்ளை துடியாநின்றாள்; ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்க விட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறாநின்றாள்- என்கிறாள் திருத்தாய். இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு என்கிறாள் என்னவுமாம்.) 3
இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3
இரக்கம் மனத்தோடு,Irakkam manathodu - நெகிழ்ச்சியை யுடைய நெஞ்சோடு (கூடிய)
இவள்,eval - இப்பெண்பிள்ளை
எரி அணை,Eri anai - நெருப்போடு ஸம்பந்தப்பட்ட
அரக்கும்,Arakkum - (வன்மையான) அரக்கையும்
மெழுகும்,Melugum - மெழுகையும்
ஒக்கும்,Okkum - ஒத்திருக்கின்றாள்;
இரக்கம் எழீர்,Irakkam ezeer - (இவள் திறத்து) இரக்கம் உண்டாகப் பெறுகின்றிலீர்;
அரக்கன்,Arakkan - இராவணனுடைய
இலங்கை,Ilangai - லங்காபுரியை
செற்றீருக்கு,Setreerukku - (ஒரு பிராட்டிக்காக) த்வம்ஸம் செய்தருளின உமக்கு
இதற்கு,Idharku - இவள் திறத்திலுண்டான உபேக்ஷைக்கு
என் செய்தேன்,En seydhen - என்ன பரிஹாரம் பண்ணுவேன்?