Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2822 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2822திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பெண்பிள்ளையின் தயநீயதசையைச் சொல்லி, இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? என்கிறாள்.) 5
இவள் இராப் பகல் வாய் வெரீஇத் தன்
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5
இவள்,Ival - இப் பெண்பிள்ளை
இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும்
வாய் வொரி இ,Vaai vori e - வாய்பிதற்றி
தன்,Than - தன்னுடைய
குவலை ஒண் கண்,Kuvalai on kan - நெய்தல் மலர்போன்றழகிய கண்களில்
நீர்கொண்டாள்,Neer kondaal - நீரையுடையளானாள்;
வண்டு,Vantu - வண்டுகள்
திவளும்,Thivalum - படிகின்ற
தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய தருத் துழாய் மாலையை
கொடீர்,Kodeer - தருகின்றீரில்லை;
தவளம் வண்ணா,Thavalam vanna - பரிசுத்தாத்மாவான தேவரீருடைய
தகவுகள்,Thagavugal - கிருபைமுதலிய குணங்கள்
என,Ena - என்னே!