| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2822 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பெண்பிள்ளையின் தயநீயதசையைச் சொல்லி, இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? என்கிறாள்.) 5 | இவள் இராப் பகல் வாய் வெரீஇத் தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என தவள வண்ணர் தகவுகளே –2-4-5 | இவள்,Ival - இப் பெண்பிள்ளை இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும் வாய் வொரி இ,Vaai vori e - வாய்பிதற்றி தன்,Than - தன்னுடைய குவலை ஒண் கண்,Kuvalai on kan - நெய்தல் மலர்போன்றழகிய கண்களில் நீர்கொண்டாள்,Neer kondaal - நீரையுடையளானாள்; வண்டு,Vantu - வண்டுகள் திவளும்,Thivalum - படிகின்ற தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய தருத் துழாய் மாலையை கொடீர்,Kodeer - தருகின்றீரில்லை; தவளம் வண்ணா,Thavalam vanna - பரிசுத்தாத்மாவான தேவரீருடைய தகவுகள்,Thagavugal - கிருபைமுதலிய குணங்கள் என,Ena - என்னே! |