| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2823 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் “எனதவளவண்ணர் தகவுகளே” என்று எம்பெருமானுடைய தயவில் குறையிருப்பதாகத் தாய் சொன்ன வார்த்தையைக் கேட்ட மகள் அந்த வார்த்தையைப் பொறாமல் ‘என் கொழுநனுக்குத் தயவில்லையென்று சொல்லலாமோ? கடலில் நீர்வற்றிப் போயிற்று என்பாருமுண்டோ? நம்முடைய பாவமென்று நம்மை நொந்துகொள்ளலாமே யல்லது அவருக்குக் கருணையில்லை யென்று வாய்திறக்கலாமோ? என்று சொன்னாளாக, அதை அநுவதிக்கிறாள் திருத்தாய்.) 6 | தகவுடையவனே யென்னும் பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் என தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6 | உள்ளம்,Ullam - தன் நெஞ்சு உக,Uga - அழியுமாறு உருகி,Urugi - நீர்ப்பண்டமாகி உள்ளுள்ளே நின்று,Ullulle nindru - தன்னில் தான் நின்று தகவு உடையவனே என்னும்,Thagavu udaiyavanee ennum - தயவு குறைவற்றவனே! என்கிறாள். பின்னும்,Pinnum - மேலும் மிக விரும்பும்,Miga virumbum - மிகவும் குதூஹலங் கொள்ளா நின்றாள்; பிரான் என்னும்,Piran ennum - உபகாரனே! என்று சொல்லுகின்றாள்; எனது அகம் உயிர்க்கு அமுதே என்னும்,Enadhu agam uyirkku amudhe ennum - ‘எனது உள்ளுயிர்க்கு அம்ருதமே!’ என்கின்றாள் |