| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2824 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (தன் மகளுடைய வருத்தங்களையும், அவன் தன் குணங்களாலே இவளை வஞ்சித்தபடியையும் தாய் சொல்லுகிறாள்.) 7 | உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே என்னும் பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என் கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7 | என் கள்வி,En kalvi - என்னிடத்திலும கூட உண்மையை மரைப்பவளான இப்பெண்பிள்ளைதான் அகப்படும்படி அவன் செய்த தான்பட்ட,Thaanpatta - தான் அகப்படும்படி அவன் செய்த வஞ்சனை,Vanjanaai - வஞ்சகம் (பலித்தபடி என்னென்னில்) உள்ளுள் ஆவி,Ullulle aavi - உள்ளுயிரானது உலர்ந்து உலர்ந்து,Ularndhu ularndhu - மிகவுமுலர்ந்து என வள்ளலே,En vallale - என்னுடைய பெருங்கொடையாளனே! கண்ணனே,Kannane - க்ருஷ்ணனே!’ என்னும்,Ennum - என்கிறாள்; பின்னும்,Pinnum - அதற்கு மேலே வெள்ளம் நீர்,Vellam neer - (திருப்பாற்) கடலிலே கிடந்தாய்,Kidandhaay - கண்வளர்ந்தருளினவனே! என்னும்,ennum - என்கிறாள். |