| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2825 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (உம்மை ஆச்ரயமாகப் பற்றியிருக்கமிவள் பிரதிகூலர் பட்டபாட்டைப்படுவது தகுதியோ? என்கிறாள்.) 8 | வஞ்சனே என்னும் கை தொழும் தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8 | வஞ்சனே என்னும்,Vanjane ennum - எனக்குத் தெரியாமலே என்னை அடிமைப்படுத்திக் கொண்டவனே ! என்கிறாள்; கை தொழும்,Kai thozhum - (அந்த நன்றிக்குத் தோற்றுக்) கைகூப்புகின்றாள் தன நெஞ்சம்,Thana nenjham - தனது நெஞ்சு வேவ,Veva - வேகும்படியாக நெடிது உயிர்க்கும்,Nedithu uyirkkum - பெருமூச்செறிகின்றாள்; விறல் கஞ்சனை,Viral kanjane - மிடுக்கனான கம்ஸனை வஞ்சனை செய்தீர்,Vanjane seydheer - கொன்றொழித்த பெருமானே! உம்மை,Ummai - உம்மை தஞ்சம் என்று,Thanjam endru - புகலாகப்பற்றி இவள் பட்டன ஏ,Ival pattana ae - இவள் பட்டபாடு என்னே ! |