திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2826 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2826திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (உம்மைப் பிரிந்ததுமுதல் இடைவிடாது நோவுபடுகின்ற இவ்வேழையின் விஷயத்திலே நீர் செய்ய நினைத்திருப்பது என்ன? என்று எம்பெருமானைக் கேட்கிறாள்.) 9
பட்டபோது எழுபோது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் சுடர் வட்ட வாய் நுதி நேமியீர் நும் திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9
பதவுரை Show / Hide
சுடர்,Sudar - ஒளி பொருந்திய
வட்டம் வாய்,Vatam vaai - வட்டமான வாயையும்
நுதி,Nuthi - கூர்மையையுமுடைய
நேமியீர்,Nemiyeer - திருவாழியையுடையவரே! (பெண்பிள்ளை)
பட்டபோது,Pattapothu - ஸூர்யாஸ்தமன காலத்தையும்
எழு போது,Ezu pothu - ஸூர்யோதய காலத்தையும்
அறியாள்,Ariyaal - அறிகின்றாளில்லை;
விரை மட்டு அலர் –,Virai mattu alar – - பரிமளமும் தேனும் பரவின
தண் துழாய் என்னும்,Than thuzhaay ennum - குளிர்ந்த திருத்துழாய் என்று வாய்வெருவுகின்றாள்;
இ ஏழைக்கு,I yezhaikku - இப்படிப்பட்ட ஏழையின் திறத்திலே
நுமது இட்டம் என் கொல்,Numadhu ittam en kol - உம்முடைய இஷ்டம் என்ன? (நீர்என்ன செய்ய நினைத்திருக்கிறீர்!)