| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2826 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (உம்மைப் பிரிந்ததுமுதல் இடைவிடாது நோவுபடுகின்ற இவ்வேழையின் விஷயத்திலே நீர் செய்ய நினைத்திருப்பது என்ன? என்று எம்பெருமானைக் கேட்கிறாள்.) 9 | பட்டபோது எழுபோது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் சுடர் வட்ட வாய் நுதி நேமியீர் நும் திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9 | சுடர்,Sudar - ஒளி பொருந்திய வட்டம் வாய்,Vatam vaai - வட்டமான வாயையும் நுதி,Nuthi - கூர்மையையுமுடைய நேமியீர்,Nemiyeer - திருவாழியையுடையவரே! (பெண்பிள்ளை) பட்டபோது,Pattapothu - ஸூர்யாஸ்தமன காலத்தையும் எழு போது,Ezu pothu - ஸூர்யோதய காலத்தையும் அறியாள்,Ariyaal - அறிகின்றாளில்லை; விரை மட்டு அலர் –,Virai mattu alar – - பரிமளமும் தேனும் பரவின தண் துழாய் என்னும்,Than thuzhaay ennum - குளிர்ந்த திருத்துழாய் என்று வாய்வெருவுகின்றாள்; இ ஏழைக்கு,I yezhaikku - இப்படிப்பட்ட ஏழையின் திறத்திலே நுமது இட்டம் என் கொல்,Numadhu ittam en kol - உம்முடைய இஷ்டம் என்ன? (நீர்என்ன செய்ய நினைத்திருக்கிறீர்!) |