திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2827 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2827திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் சேகூஷித்துக் கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர் நோக்கிக் கொள்ள வேணுமென்று பிரார்த்திக்கின்றாள்.) 10
ஏழை பேதை இராப்பகல் தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10
பதவுரை Show / Hide
கிளர்,Kilar - விஞ்சின
வாழ்வை,Vaazhvai - (இராவணனது) செல்வம்
வேவ,Veva - நீறாகும்படி
இலங்கை,Ilankai - லங்காபுரியை
செற்றீர்,Setreer - அழித்தவரே!
எழை பேதை,Ezhai paedhai - எழையும் பேதையுமான இவள்
இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும்
தன்,Than - தன்னுடைய
கேழ் இல்,Kael il - ஒப்பற்ற
ஒண் கொண்டாள்,On kondaal - நீரைக்கொண்டாள்;
இவள்,Ival - இவளுடைய
மாழை நோக்கு ஒன்றும்,Maalzai nokku ondrum - இளநோக்கு ஒன்றையுமாவது
வாட்டேன் மின்,Vaatten min - வாடச்செய்யாமல் தளிர்ப்பிக்க வேணும்.