Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2827 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2827திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் சேகூஷித்துக் கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர் நோக்கிக் கொள்ள வேணுமென்று பிரார்த்திக்கின்றாள்.) 10
ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10
கிளர்,Kilar - விஞ்சின
வாழ்வை,Vaazhvai - (இராவணனது) செல்வம்
வேவ,Veva - நீறாகும்படி
இலங்கை,Ilankai - லங்காபுரியை
செற்றீர்,Setreer - அழித்தவரே!
எழை பேதை,Ezhai paedhai - எழையும் பேதையுமான இவள்
இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும்
தன்,Than - தன்னுடைய
கேழ் இல்,Kael il - ஒப்பற்ற
ஒண் கொண்டாள்,On kondaal - நீரைக்கொண்டாள்;
இவள்,Ival - இவளுடைய
மாழை நோக்கு ஒன்றும்,Maalzai nokku ondrum - இளநோக்கு ஒன்றையுமாவது
வாட்டேன் மின்,Vaatten min - வாடச்செய்யாமல் தளிர்ப்பிக்க வேணும்.