| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2828 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இத் திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது. ஆழ்வார் பட்ட கிலேசமொன்றும் படாதே எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாமென்கிறது. --இங்கு வாமனன் என்றது தன்பொருளை விடமாட்டாதவன் என்பதைக் காட்டுதற்காக.) 11 | வாட்டமில் புகழ் வாமனனை இசை கூட்டி வண் சடகோபன் சொல் அமை பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11 | வாட்டம் இல் புகழ்,Vaattam il pugazh - வாட்டமற்ற புகழுடையனான வாமனனை,Vaamananai - வாமனனைக்குறித்து வண்சடகோபன்,Vancha sadagopan - உதாரரான ஆழ்வார் இசை கூட்டி,Isai kooti - இசையோடே சேர்த்து சொல்,Sol - அருளிச்செய்த அமை,Amai - இலக்கணமமைந்த பாட்டு ஓர் ஆயிரத்து,Paattu or aayiraththu - ஓராயிரம் பாசுரங்களுள் இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால் அடி,Adi - (அந்த வாமனமூர்த்தியின்) திருவடிகளில் அம் தாமம்,Am thamam - அழகிய புஷ்பங்களை சூட்டல் ஆகும்,Suttal aagum - ஸமாப்பிக்கும் படியான பேறு உண்டாகும். |