Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2828 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2828திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இத் திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது. ஆழ்வார் பட்ட கிலேசமொன்றும் படாதே எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாமென்கிறது. --இங்கு வாமனன் என்றது தன்பொருளை விடமாட்டாதவன் என்பதைக் காட்டுதற்காக.) 11
வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11
வாட்டம் இல் புகழ்,Vaattam il pugazh - வாட்டமற்ற புகழுடையனான
வாமனனை,Vaamananai - வாமனனைக்குறித்து
வண்சடகோபன்,Vancha sadagopan - உதாரரான ஆழ்வார்
இசை கூட்டி,Isai kooti - இசையோடே சேர்த்து
சொல்,Sol - அருளிச்செய்த
அமை,Amai - இலக்கணமமைந்த
பாட்டு ஓர் ஆயிரத்து,Paattu or aayiraththu - ஓராயிரம் பாசுரங்களுள்
இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால்
அடி,Adi - (அந்த வாமனமூர்த்தியின்) திருவடிகளில்
அம் தாமம்,Am thamam - அழகிய புஷ்பங்களை
சூட்டல் ஆகும்,Suttal aagum - ஸமாப்பிக்கும் படியான பேறு உண்டாகும்.