| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2829 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (தாம் மனோரதித்தபடியே தன் பாரிகரங்கனோடே கூடவந்து தம்மோட கலக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த புகரைப் பேசுகிறார்.) 1 | அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம் செந்தாமரை யடிகள் செம் பொன் திருவுடம்பே –2-5-1 | என் ஆவி,En aavi - என் ஆத்மாவிலே அம் தாமத்து அன்பு செய்து,Am thamathu anbu seydhu - பரமபதத்ததிற் பண்ணும் விருப்பத்தைப்பண்ணி சேர்,Ser - வந்து பொருந்தின அம்தாமம்,Am thamam - அம்மானுக்கு அழகிய மாலையை யணிந்த வாள்,Vaal - ஒறியுள்ள முடி,Mudi - திருவபிஷேகமும் சங்கு ஆழி,Sanggu aazhi - சங்கு சக்கரங்களும் நூல்,Nool - பூணூலும் ஆரம்,Aaram - ஹாரமும் உள,Ull - உள்ளன; கண்,Kan - திருக்கண்கள் செம் தாமரை தடம்,Sem thaamarai thadam - செந்தாமரைத் தடதகமபோன்றுள் செம் கனி வாய்,Sem kani vaai - சிவந்து கனிந்த திருவதரம் செம் கமலம்,Sem kamalam - செந்தாமரையாகவே யிரா நின்றது; அடிகள்,Adigal - திருவடிகளும் செம் தாமரை,Sem thaamarai - செந்தாமரை மலராகவே திரு உடம்பு,Thiru utampu - திருமேனி செம் பொன்,Sem pon - செம்பொன்னாயிராநின்றது. |