Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2829 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2829திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (தாம் மனோரதித்தபடியே தன் பாரிகரங்கனோடே கூடவந்து தம்மோட கலக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த புகரைப் பேசுகிறார்.) 1
அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம் பொன் திருவுடம்பே –2-5-1
என் ஆவி,En aavi - என் ஆத்மாவிலே
அம் தாமத்து அன்பு செய்து,Am thamathu anbu seydhu - பரமபதத்ததிற் பண்ணும் விருப்பத்தைப்பண்ணி
சேர்,Ser - வந்து பொருந்தின
அம்தாமம்,Am thamam - அம்மானுக்கு அழகிய மாலையை யணிந்த
வாள்,Vaal - ஒறியுள்ள
முடி,Mudi - திருவபிஷேகமும்
சங்கு ஆழி,Sanggu aazhi - சங்கு சக்கரங்களும்
நூல்,Nool - பூணூலும்
ஆரம்,Aaram - ஹாரமும்
உள,Ull - உள்ளன;
கண்,Kan - திருக்கண்கள்
செம் தாமரை தடம்,Sem thaamarai thadam - செந்தாமரைத் தடதகமபோன்றுள்
செம் கனி வாய்,Sem kani vaai - சிவந்து கனிந்த திருவதரம்
செம் கமலம்,Sem kamalam - செந்தாமரையாகவே யிரா நின்றது;
அடிகள்,Adigal - திருவடிகளும்
செம் தாமரை,Sem thaamarai - செந்தாமரை மலராகவே
திரு உடம்பு,Thiru utampu - திருமேனி
செம் பொன்,Sem pon - செம்பொன்னாயிராநின்றது.