| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2830 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (பிராட்டி முதலானவர்களும் தன் பக்கலில் ஒரோ. இடங்களைப் பற்றி ஸத்தை பற்றாராம்படியிருக்கிற எம்பெருமான் ஸகல அவயவங்களாலும் என்னோடே ஸம்ச்லேஷித்து அத்தாலே ஒளி மல்கப் பெற்றனென்கிறார் இதில்.) 2 | திருவுடம்பு வான் சுடர் செந்தாமரைக் கண் கை கமலம் திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ் ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2 | ஒருவு இடம் ஒன்று இன்றி,Oruvu idam onru indri - நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்) என்னுள் கலந்தானுக்கு,Ennul kalanthanukku - என்னோடு சேர்ந்தவானன எந்தை பெருமாற்கு,Endhai perumarku - என் சேர்ந்தவனான திரு உடம்பு,Thiru utampu - திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது. கண்,Kan - திருக்கண்கள் செம் தாமரை,Sem thaamarai - செந்தாமரை மலர்களாயிராநின்றன; கை,Kai - திருக்ககைகள். கமலம்,Kamalam - தாமரைமலரே. திரு இடமே,Thiru idame - பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று; கொப்பூழ்,Koppoozh - திருநாபி அயன் இடமே,Ayan idame - பிராமனுக்கு உறைவிடமாயிற்று; ஒருவு இடமும்,Oruvu idamum - நீங்கின இடமும் அரனே,Arane - ருத்ரனுடையதே; ஓ,Oo - ஆச்சரீரயம். |