Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2830 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2830திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (பிராட்டி முதலானவர்களும் தன் பக்கலில் ஒரோ. இடங்களைப் பற்றி ஸத்தை பற்றாராம்படியிருக்கிற எம்பெருமான் ஸகல அவயவங்களாலும் என்னோடே ஸம்ச்லேஷித்து அத்தாலே ஒளி மல்கப் பெற்றனென்கிறார் இதில்.) 2
திருவுடம்பு வான் சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2
ஒருவு இடம் ஒன்று இன்றி,Oruvu idam onru indri - நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்)
என்னுள் கலந்தானுக்கு,Ennul kalanthanukku - என்னோடு சேர்ந்தவானன
எந்தை பெருமாற்கு,Endhai perumarku - என் சேர்ந்தவனான
திரு உடம்பு,Thiru utampu - திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது.
கண்,Kan - திருக்கண்கள்
செம் தாமரை,Sem thaamarai - செந்தாமரை மலர்களாயிராநின்றன;
கை,Kai - திருக்ககைகள்.
கமலம்,Kamalam - தாமரைமலரே.
திரு இடமே,Thiru idame - பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று;
கொப்பூழ்,Koppoozh - திருநாபி
அயன் இடமே,Ayan idame - பிராமனுக்கு உறைவிடமாயிற்று;
ஒருவு இடமும்,Oruvu idamum - நீங்கின இடமும்
அரனே,Arane - ருத்ரனுடையதே;
ஓ,Oo - ஆச்சரீரயம்.