Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2832 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2832திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (என்னோடே கலந்த எம்பெருமான் யாவஜ்ஜீவம் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் பரம போக்யணாயிரா நின்றானே யென்று உள் குழைகின்றாரிதில்.) 4
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4
எப்பொழுதும்,Eppozhuthum - எல்லா கூஷணமும்
எந்நாள்,Ennal - எல்லா நாட்களும்
எத்திங்கள்,Ettingal - எல்லா மாதங்களும்
எவ்வாண்டு,Evvantu - எல்லா வருஷங்களும்
எவ்வூழி ஊழி தொறும்,Evvooli ooli thorum - கற்பங்கள் தோறும் (அது பவித்தாலும்)
தான் ஆய்,Thaan aay - தனக்குள்ளே அடங்கப் பெற்றவனாய்
மரகதம் குன்றம் ஒக்கும்,Maragatham kunram okkum - மரதகமலையை யொத்திருப்பன்;
கண்,Kan - (அவனது) திருக்கண்களும்
அப்பொழுதைக்கு அப்பொழுது,Appozhuthaikku appozhudhu - அந்தந்தக் காலங்களிலே
என் ஆரா அமுதம்,En aara amudham - எனக்குத் தெவிட்டாத அம்ருதமர்யிக்கு மெம் பெருமான்
எப்பொருளும்,Epporulum - எல்லாப் பொருள்களும்
அப்பொழுது தாமரை பூ,Appozhudhu thaamarai poo - அப்போதலர்ந்த தாமரை மலர் போன்றவை
பாதம் அப்பொழுது கமலம்,Paadham appozhudhu kamalam - அப்போதலர்ந்த தாமரையே;
கை,Kai - திருக்கைகளும் (அவ்வண்ணமே.)