| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2833 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் என்னோடு கலந்ததனால் பெற்ற அழகுக்கு உபமான மில்லை என்கிறார்.) 5 | ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம் பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5 | ஆரா அமுதம் ஆய்,Aara amudham aay - தெவிட்டாத அமுதமர்கி அல் ஆவி உள்,Al aavi ul - ஒரு பொருளல்லாத எனது நெஞ்சினுள்ளே கலந்த,Kalandha - கூடி நின்றவனாயும் கார்ஆர்கரு முகில் போல்,Kaarargaru mugil pol - கார்காலத்தில் பொருந்திய காளமேகம் போன்ற வனாயும் என் அம்மான்,En ammaan - எனக்கு நாதனாயு மிருக்கிற கண்ணனுக்கு,Kannanukku - ஸ்ரீக்ருஷ்ணுக்கு செம் பவளம்,Sem pavalam - சிவந்த பவழங்கள் வாய் நேரா,Vaai neraa - அதரத்திற்கு ஒப்பாக மாட்டா; கமலம்,Kamalam - தாமரைப் பூ கண் பாதம் கை,Kan paadham kai - திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு நேரா,Naeraa - ஒப்பாக மாட்டாது; பேர் ஆரம்,Per aram - பெரிய ஹாரங்களும் நீள் முடி,Neel mudi - உயர்ந்த திருவபிஷேகமும் நாண்,Naan - திரு அரைநாணும் பின்னும் இழை,Pinnun izhai - மற்றுமுள்ள திருவாய ரணங்களும் பல,Pala - அனேகங்கள். |