Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2833 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2833திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் என்னோடு கலந்ததனால் பெற்ற அழகுக்கு உபமான மில்லை என்கிறார்.) 5
ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5
ஆரா அமுதம் ஆய்,Aara amudham aay - தெவிட்டாத அமுதமர்கி
அல் ஆவி உள்,Al aavi ul - ஒரு பொருளல்லாத எனது நெஞ்சினுள்ளே
கலந்த,Kalandha - கூடி நின்றவனாயும்
கார்ஆர்கரு முகில் போல்,Kaarargaru mugil pol - கார்காலத்தில் பொருந்திய காளமேகம் போன்ற வனாயும்
என் அம்மான்,En ammaan - எனக்கு நாதனாயு மிருக்கிற
கண்ணனுக்கு,Kannanukku - ஸ்ரீக்ருஷ்ணுக்கு
செம் பவளம்,Sem pavalam - சிவந்த பவழங்கள்
வாய் நேரா,Vaai neraa - அதரத்திற்கு ஒப்பாக மாட்டா;
கமலம்,Kamalam - தாமரைப் பூ
கண் பாதம் கை,Kan paadham kai - திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு
நேரா,Naeraa - ஒப்பாக மாட்டாது;
பேர் ஆரம்,Per aram - பெரிய ஹாரங்களும்
நீள் முடி,Neel mudi - உயர்ந்த திருவபிஷேகமும்
நாண்,Naan - திரு அரைநாணும்
பின்னும் இழை,Pinnun izhai - மற்றுமுள்ள திருவாய ரணங்களும்
பல,Pala - அனேகங்கள்.