| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2834 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (ஆழ்வார் தம்மோடே எம்பெருமான் கலக்கும்போது ஒரு வடிவோடே கலந்து த்ருப்தி பெற மாட்டாதே பலவடிவுகள் கொண்டு கலந்து அநுபவிக்கும் படியை அருளிச்செய்கிறார்.) 6 | பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6 | பாம்பு அணை மேலாற்கு,Paambu anai melaarku - ஆதிசேஷனைப் பள்ளியாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு பண்பு எண்ணில்,Panbu ennil - (என்னோடு கலவியாலுண்டான அழகை) நிரூபித்துப் பார்க்குமிடத்து, ஆபரணம்,Abaranam - திருவாபரணங்கள் பலபல,Palapala - மிகப் பலவாயிருக்கும் சோதி வடிவு,Sodi vadivu - ஒளியுருவான திருமேனி பல பல,Pala pala - மிகப் பலவாயிருக்கும் கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்,Kandu undu kettu urru mondhu inbam - பார்த்தும் உண்டும் கேட்டும் ஸ்பர்சித்தும் மோந்தும் (உண்டாகிற) சுகங்களும் பல பல,Pala pala - மிகப்பலவாயிருக்கும்! ஞானமும்,Gnaanamum - ஞானங்களும் பல பல,Pala pala - மிக மிகவாம். |