திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2835 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2835திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் சில திவ்விய சேஷ்டிதங்களைத் தமக்குக் காட்டியருளக் கண்டு அநுபவித்துப் பேசுகிறார்.) 7
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும் தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும் பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7
பதவுரை Show / Hide
பால் கடலுள்,Pal kadalul - திருப்பாற் கடலிலே
பாம்பு அணை மேல்,Paambu anai mel - சேஷசயனத்தின் மீது
பள்ளி அமர்ந்ததுவும்,Palli amarthaduvum - கண்வளர்தல் பொருந்தினதும்.
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்,Kaambu anai thol pinnai kku aay - மூங்கில் போன்ற தோள் களையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
ஏழ் ஏறு,Eezh er - ஏழு ரிஷபங்களை
உடன்,Udan - ஏக காலத்தில்
செற்றதுவும்,Settraduvum - தொலைத்ததும்.
தேன் பணைய சோலை,Then panaiya solai - தேனையும் கிளைகளையுமுடைய சோலையாகத் தழைத்த
ஏழ் மராமரம்,Eezh maramaram - ஸப்த ஸால வ்ருஸங்களையும்
எய்ததவும்,Eythadavum - துளை படுத்தினதும்
பூ பிணைய,Poo pinaiya - அழகிய தொடுத்தலையுடைத்தான
தண்,Than - குளிர்ந்த
துழாய்,Thuzhai - திருத்துழாய் மாலையணிந்த
பொன்,Pon - பொன் மயமான
முடி,Mudi - திரு வபிஷேகத்தையடையவனாயும்
அம் போர்ஏறு,Am pooreru - அழகியவனாயும்-போர்க்குரிய இடபம் போன்றவனுமான எம்பெருமான் (செய்த செயல்களாம்.)