Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2836 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2836திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் பராத்பரனாயிருந்து வைத்து என்னுடைய தாழ்ச்சியைக் கணிசியாதே என்னோடே வந்து கலந்த பெருங்குணத்தை நான் பேசவல்லேனல்லேனென்கிறார்) 8
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8
பொன் முடி,Pon mudi - பொன் மயமான திருமுடியை யுடையனாய்
அம் போர்ஏற்றை,Am pooretray - அழகிய போரேறு போன்றவனாய்
எம்மானை,Emmaanai - எனக்கு நாதனாய்
நால் தட தோள்,Naal tada thol - நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய்
தன் முடிவு ஒன்றும் இல்லாத,Than mudivu ondrum illaadha - தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய்
தண் துழாய் மாலையனை,Than thuzhai maalaiyanai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனாய்
என் முடிவு காணாதே,En mudivu kaanaadhae - எனது தாழ்வைக் கணிசியாமல்
என் உள் கலந்தானை,En ul kalandhaanai - என்னோடு கலவி செய்தவனுமான பெருமானை
நான் சொல் முடிவு காணேன்,Naan sol mudivu kaanen - நான் சொல்லி முடிக்கும் வகையறிகின்றிலேன்!
என் சொல்வது,En solvadhu - என்னவென்று சொல்லலாம்!
சொல்லீர்,Solleer - நீங்களே சொல்லுங்கள்