| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2836 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் பராத்பரனாயிருந்து வைத்து என்னுடைய தாழ்ச்சியைக் கணிசியாதே என்னோடே வந்து கலந்த பெருங்குணத்தை நான் பேசவல்லேனல்லேனென்கிறார்) 8 | பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள் தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8 | பொன் முடி,Pon mudi - பொன் மயமான திருமுடியை யுடையனாய் அம் போர்ஏற்றை,Am pooretray - அழகிய போரேறு போன்றவனாய் எம்மானை,Emmaanai - எனக்கு நாதனாய் நால் தட தோள்,Naal tada thol - நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய் தன் முடிவு ஒன்றும் இல்லாத,Than mudivu ondrum illaadha - தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய் தண் துழாய் மாலையனை,Than thuzhai maalaiyanai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனாய் என் முடிவு காணாதே,En mudivu kaanaadhae - எனது தாழ்வைக் கணிசியாமல் என் உள் கலந்தானை,En ul kalandhaanai - என்னோடு கலவி செய்தவனுமான பெருமானை நான் சொல் முடிவு காணேன்,Naan sol mudivu kaanen - நான் சொல்லி முடிக்கும் வகையறிகின்றிலேன்! என் சொல்வது,En solvadhu - என்னவென்று சொல்லலாம்! சொல்லீர்,Solleer - நீங்களே சொல்லுங்கள் |