Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2838 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2838திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) ((ஆணல்லன்) எம்பெருமானைப் பேசித்தலைக்கட்டுவது மிகவும் ஆயாஸஸாத்யமென்கிறார்.) 10
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10
எம்பெம்மானை கூறுதல்,Em pemmaanai koorudhal - எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதானது
கோணை பெரிது உடைத்து,Konai peridhu udhaithu - மிகவும் ப்ரயாஸமுடையதாயிருக்கிறது; (ஏனென்னில், அப்பெருமான்)
ஆண் அல்லன்,Aan allan - ஆணுமல்லன்,
பெண் அல்லன்,Penn allan - பெண்ணுமல்லன்
அல்லா அலியும்,Alla aliyum - இவ்விரண்டுமல்லாத நபும்
அல்லன்,Allan - ஸயனுமல்லன்
காணாலும் ஆகான்,Kaanaalum aagaan - கண்ணாற் பார்க்கவும் முடியாதவன்
உளன் அல்லன்,Ulan allan - உள்ளவனல்லன்
இல்லை அல்லன்,Illai allan - இல்லாதவனுமல்லன்
பேணுங்கால்,Penungaal - (அடியார்) விரும்பின காலத்து
பேணும் உரு ஆகும்,Penum uru aagum - அவர்கள் விரும்பின வடிவை யுடையவனாவன்
அல்லனும் ஆம்,Allanum aam - அப்படியல்லாதவனாயுமிருப்பன் (ஆதலால் என்க)