| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2838 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) ((ஆணல்லன்) எம்பெருமானைப் பேசித்தலைக்கட்டுவது மிகவும் ஆயாஸஸாத்யமென்கிறார்.) 10 | ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன் காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம் கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10 | எம்பெம்மானை கூறுதல்,Em pemmaanai koorudhal - எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதானது கோணை பெரிது உடைத்து,Konai peridhu udhaithu - மிகவும் ப்ரயாஸமுடையதாயிருக்கிறது; (ஏனென்னில், அப்பெருமான்) ஆண் அல்லன்,Aan allan - ஆணுமல்லன், பெண் அல்லன்,Penn allan - பெண்ணுமல்லன் அல்லா அலியும்,Alla aliyum - இவ்விரண்டுமல்லாத நபும் அல்லன்,Allan - ஸயனுமல்லன் காணாலும் ஆகான்,Kaanaalum aagaan - கண்ணாற் பார்க்கவும் முடியாதவன் உளன் அல்லன்,Ulan allan - உள்ளவனல்லன் இல்லை அல்லன்,Illai allan - இல்லாதவனுமல்லன் பேணுங்கால்,Penungaal - (அடியார்) விரும்பின காலத்து பேணும் உரு ஆகும்,Penum uru aagum - அவர்கள் விரும்பின வடிவை யுடையவனாவன் அல்லனும் ஆம்,Allanum aam - அப்படியல்லாதவனாயுமிருப்பன் (ஆதலால் என்க) |